போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக பெரம்பூர் பகுதியில் உள்ள சிடிடிஇ பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற இயக்கத்தை மாற்று ஊடக மையத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா.காளீஸ்வரன் தொடங்கி வைத்தார். இதில் கல்லூரியின் தாளாளர் எல்.பழமலை, முதல்வர் ஶ்ரீதேவி, துணை முதல்வர் ஆர்.மீனாட்சி, என்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் கஸ்தூரி, பிரியா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், தலைவர் ஜி.நித்யராஜ், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.அபிராமி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.நிதிஷ், துணைச் செயலாளர் கே.சுரேஷ், பெரம்பூர் பகுதி செயலாளர் எஸ்.கார்த்திக், பொருளாளர் ஆர்.சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.