வண்டலூர், மே 15-
மறைமலைநகர் அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவில் தேரோட்டம் வருகிற 30-ந்தேதி நடைபெற இருக்கிறது. அப்போது தேர் அனுமந்தபுரம் சாலையில் சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடையும். இதையடுத்து சாலையோர கடைகளை அகற்ற கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் வெங்கடேசன் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து திங்களன்று காலை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தலைமையில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி ஜே.சி.பி.எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
இதுபற்றி அறிந்ததும் ஏராளமான வியாபாரிகள் குவிந்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 நாட்கள் அவகாசம் கேட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.