சென்னை,மே 15-
சென்னை கோயம்பேடு பகுதியில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வெளிவட்ட சாலைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
தாம்பரம் மாநகராட்சி எல்லைக்கு அப்பால் வரதராஜபுரம் வெளிவட்ட சாலையில் ஆம்னி பேருந்து நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இந்த ஆம்னி பேருந்து நிலையம் அமைகிறது. அங்கு 100 ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்காக இடவசதி ஏற்படுத்தப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.