சென்னை, பிப். 2 - பாலின பாகுபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த மாண வர்களை எம்சிசி கல்லூரி நிர்வாகம் தற்காலிக நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித் துறை இயக்குநரிடம் மாண வர்கள் புகார் அளித்துள்ள னர். தாம்பரத்தில் மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி (எம்சிசி) உள்ளது. கல்லூரி நிர்வாகம் அண்மையில் நடத்தை விதிகளை கடு மையாக அமல்படுத்தி யுள்ளது. இதனை ஆட்சேபி த்த முதுகலை முதலா மாண்டு மாணவர் விவே கானந்தன், மாணவி கீர்த் தனா ஆகியோரை நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு சமூக வலை தளங்களிலும் கண்டனங்கள் எழுந்தன. இந்திய மாண வர் சங்கத்தினர் சுவரொட்டி இயக்கத்தை நடத்தினர். கல்லூரி வளாகத்திற்குள் கடந்த 30ந் தேதி மாணவர் கள் போராட்டம் நடத்தினர். நடத்தை விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும், மாணவர்களின் தற்காலிக நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை யடுத்து மாணவர்களை அழைத்து பேசிய நிர்வா கம், உறுதிமொழி ஏதும் வழங்கவில்லை. இந்நிலையில், சென்னை மண்டல உயர்கல்வித்துறை உதவி இயக்குநர் ரேகா கணேஷிடம் வியாழனன்று (பிப்.2) இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலை வர் அரவிந்தசாமி அளித் துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது: எம்சிசி கல்லூரியில் நடைமுறைப் படுத்தப்பட் டுள்ள, நடத்தை விதிகள் முற்றிலும் மாணவர்களுக்கு விரோதமானது. குறிப்பாக, மாணவர்கள் கைகோர்த்து செல்வது, பேசிக்கொள்வது, தோழமையோடு கைகுலுக் குவது போன்றவற்றை கூட நிர்வாகம் கொச்சைப்படுத்தி கேலி செய்கிறது. இதற்கு எதிராக கேள்வி எழுப்பிய மாணவர் விவேகானந்தனை கல்வி ஆண்டு முழுவதும், மாணவி கீர்த்தனாவை 14 நாள்களும் இடைநீக்கம் செய்துள்ளது. இந்த மாணவர் விரோத போக்கை கல்லூரி நிர்வா கம் கைவிடுவதோடு, இடைநீக்கத்தை உடனே ரத்து செய்து, தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். பேராசிரியர்களை வைத்து மாணவர்களை மன ரீதியாக துன்புறுத்திய நிர்வாகத்தின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் விவேகானந்தன், கீர்த்தனா ஆகியோரும் உதவி இயக் குநரிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வின்போது, சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ரா.பாரதி, துணைச்செய லாளர் சுஜித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.