சென்னை, ஜூலை 18- வடசென்னை வளர்ச்சியடைந்த தொகுதி யாக மாற்றுவேன் என வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி தெரிவித்தார். வடசென்னை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் கலாநிதி வீராசாமி சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவொற்றியூர் தொகுதியில் வீதிவீதியாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த முறை ரயில்வே பாலங்கள், கேந்திர வித்யாலயா பள்ளிக்கூடம், அங்கன்வாடி, பூங்கா, ஆரம்ப சுகாதார நிலையம், புதிய வகுப்பறைகள் என பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். அடுத்த 5 ஆண்டுகளில் வடசென்னையை வளர்ச்சியடைந்த தொகுதியாக நிச்சய மாக மாற்றுவேன் என்று கூறினார். மேலும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்து வது குறித்து பல்வேறு துறையினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறேன் என்றும், விரைவில் விரிவான தி்ட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு திட்டமாக ஒன்றிய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, பகுதிச் செயலாளர் ம.அருள்தாசன், சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் எஸ். கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், வீ.கவி கணேசன், சுசீலா ராஜா, கே.பி.சொக்க லிங்கம், தமிழரசன், திரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.