சென்னை, ஜன.23- ஹண்ட்ரட் என்பது உலகில் விளையாட்டு தொடர்பான சாத னங்கள், டி சர்ட்டுகள், காலணிகள் தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனமாகும், இந்தியாவில் இந்நிறுவனம் பிரபல பாட்மிண்டன் வீரரும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னாள் முதல் நிலை வீரருமான ஸ்ரீகாந்த் கிடாம்பியுடன் தனது கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த கூட்டு இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் 2025 இல் அதிகாரப்பூர்வ மாக அறிமுகமாகும். இது அடுத்த தலைமுறை பாட்மிண்டன் ஆர்வலர்களை ஊக்கு விப்பதற்கு பயன்படும். 2024 கூகுள்-டெலாய்ட் திங்க் ஸ்போர்ட்ஸ் அறிக்கையின்படி, கிரிக்கெட் போட்டிகளுக்கு பின்னர், பாட்மிண்டன் இப்போது இந்தியாவில் அடுத்த தலைமுறை மத்தியில் இரண்டாவது மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது. இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், நாங்கள் ஒன்றிணைந்து, அடுத்த தலை முறை பாட்மிண்டன் வீரர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.