districts

img

தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகரிப்பு

சென்னை, ஜூலை 26-

      தொழிற்சாலைகளில்  பணிபுரியும் தொழிலாளர் ்களுக்கு தொற்றா நோய்க ளுக்கான ஆபத்து அதிக மாக உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.  

     இந்திய பொது சுகா தார அறக்கட்டளை, டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு  மையம், சென்னை நீரிழிவு  ஆராய்ச்சி அறக் கட்டளை,  திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா  திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப நிலையம் எமோரி பல்கலை கழகம், ஹார்வார்டு பல்கலை கழகம் ஆகிய வற்றுடன் இணைந்து பணி யிடங்களில் நீரிழிவுநோய் தடுப்பு குறித்த   முதல் ஆய்வறிக்கையை இந்தியா வொர்க்ஸ் திட்டம்  என்ற பெயரில்   வெளியிடப் பட்டுள்ளது.

     கேரளம், தமிழ்நாடு, ஜார்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் ஒடிசா என 5 மாநிலங்களில் உள்ள 11 ஆலைகளில் இந்த ஆய்வு நடைபெற்றதாக பொது சுகாதார அறக்கட்டளையின் புகழ்பெற்ற பேராசிரியர்   டாக்டர். பிரபாகரன்,  கூறி னார். அங்கிருந்த ஊழியர்க ளின் 3 மாத ரத்த குளுக்கோஸ் சராசரி, உடல் பருமன், ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள கொழுப்பு அவர்களது எடை போன்ற முக்கியமான விஷயங்கள் அளவிடப்பட்டு மதிப்பிடப் பட்டது. ஆய்வின் முடிவில் இதய நோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் அதி கரித்திருப்பது தெரியவந்த தாகவும் அவர் தெரிவித் தார்.

      நடுத்தரத் நிறுவனங்க ளில் பணிபுரியும் ஊழி யர்கள் உடல் பருமன், நீரி ழிவு, உயர் ரத்த அழுத்தம்  போன்ற நாள்பட்ட நோய்க ளுக்கான ஆபத்துக்களை கொண்டிருந்தது தெரிய வந்தது என்றும் அவர்  கூறினார். உடல் எடை, இடுப்பு சுற்றளவு, ரத்த அழுத்தம். நீரிழிவு ஆகி வற்றால் இதய நோய் குறித்த ஆபத்து காரணி களை இவர்கள் கொண்டி ருந்தனர் என்று சென்னை நீரிழிவு  ஆராய்ச்சி அறக் கட்டளை தலைவர் டாக்டர். வி.மோகன் கூறினார்.