districts

img

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு

சென்னை, ஏப். 26- சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்  வரை தினசரி விரைவு மின்சார ரயில் இயக்கப்படு கிறது. கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன் மென்ட்டிற்கு இரவு 9.35 மணிக்கு  சென்றடைகிறது . இந்த ரயில் மே மாதம் 2ஆம் தேதியில் இருந்து வேலூரில் இருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்க ரயில்வே  வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது இந்த ரயில் வேலூர் கண்டோன் மென்ட்டில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் மே 3ஆம் தேதி மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு 5.40 மணிக்கு வந்து சேரும். வேலூரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9.50 மணிக்கு தற்போது உள்ள கால அட்டவணைப்படி வந்து சேர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பென்னாத்தூர், கண்ண மங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மடிமங்கலம், போளூர் ரயில் நிலை யங்களில் நின்று செல்லும்  என்று சென்னை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.