districts

img

உணவு உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்!

மிக்ஜம் புயலால் மக்கள் அவதி

சென்னை, நவ.4- சென்னையில் மிக்ஜம் புயல்  காரணமாக கனமழை பெய்து வரு கிறது. இதனால் சென்னையில் ஹோட்டல்கள், கடைகள் மூடப்பட்டுள் ளதால் பெரும்பாலானோர் உணவு கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அதோடு மின்வெட்டு அமலில் இருக்கும் நிலையில் மெழுகுவர்த்தி கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடல் பகுதியில் ஞாயி றன்று உருவான ‘மிக்ஜம்’ புயல்  தீவிர புயலாக உருமாறி உள்ளது.  இந்த புயல் செவ்வாயன்று தெற்கு  ஆந்திரா கடற்கரையை நெல்லூ ருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கிறது. தற்போது இந்த புயல் வட தமிழக  கடலோரப்பகுதிகளில் நிலவி வரு கிறது. இந்த புயல் ஆந்திரா நோக்கி மெதுவாக நகர்ந்து செல்கிறது. இந்த புயல் காரணமாக ஞாயிறன்று நள்ளி ரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் எதிர்பார்த்ததை விட  அதிகளவில் கனமழை பெய்துள்ளது. அதோடு மொத்த சென்னையிலும் விடாமல் நள்ளிரவு முதல் மழை பெய்து வருவதாக தலைநகர் ஸ்தம்பித்துள்ளது. எங்கு பார்த்தாலும் மழைநீராக காட்சியளிக்கிறது. சாலை களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடு கிறது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. குடி யிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ள நிலையில் கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள் ளன. 

சென்னையில் கொட்டும் அடைமழை.. 

எப்போது நிற்கும் என்று தெரியா மல் விழிபிதுங்கி நிற்கும் நிலை உள்ளது. வீடுகளை சுற்றி தேங்கி உள்ள மழைநீரால் பொதுமக்கள் வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர். அதோடு வெள்ளம் பாதித்த பகுதி களில் மீட்பு படையினர் படகுகள் மூலம்  மக்களை மீட்டு வருகின்றனர். இது தவிர பல இடங்களில் அசம்பாவித சம்ப வங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழையால் வீடுகளை விட்டு  யாரும் வெளியே வரவேண்டாம் என்ற எச்சரிக்கை காரணமாக பெரும்பா லான கடைகள் சென்னையில் அடைக் கப்பட்டுள்ளன. இதனால் மெழுகு வர்த்தி கிடைக்காமல் மக்கள் சிர மத்தை எதிர்கொண்டு வருகின்ற னர். அதோடு சென்னையை பொறுத்தமட்டில் ஏராளமான   புலம்பெயர் தொழிலாளர்கள் அறை எடுத்தும், வீடுகளை வாடகைக்கு எடுத்தும் தங்கி பணியாற்றி வருகின்ற னர். இவர்களில் ஒரு தரப்பினர் சமை யல் செய்து சாப்பிட்டாலும் கூட இன்னொரு தரப்பினர் ஹோட்டல் உணவுகளை சாப்பிடுவதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். இந்நிலை யில் தான் சென்னையில் பல இடங்க ளில் ஹோட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் ‘பேச்சிலர்கள்’ உணவு வாங்க ஹோட்டல்களை தேடி சாலைகளில் அலைந்து சிரமப்படும் அவலநிலையும் உள்ளது.

அதிகபட்ச மழை: கடல் உள்வாங்காததே மழைநீர் வடியாமல் இருக்கக் காரணம் சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை, டிச.4- மிக்ஜம் புயல் காரணமாக ஞாயிறு  முதலே சென்னை உட்பட 4 மாவட்டடங களில் கனமழை கொட்டி தீர்த்து வரு கிறது. இந்த கனமழையால் சென்னை யில் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கி  உள்ளது.பல மணி நேரம் ஆகியும்  நீர் வடியாமல் இருப்பதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்ற னர். இதற்கிடையே மழை நீர் வடியா மல் இருக்க என்ன காரணம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகக் குறுகிய காலத்தில் அதிகபட்ச மழை கொட்டி தீர்த்துள்ளது. இதுவே பிரச்சனைக்குக் காரணம். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஆலோ சனைப்படி நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. உள்வாங்கவில்லை: தண்ணீர் ஏன் வடியாமல் இருக்கிறது  என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.  ஆறுகளில் இருந்து கடலுக்குச் செல்லும் நீரைக் கடல் உள்வாங் காமல் இருப்பதே இதற்குக் காரண மாகும். கூவம், அடையாறு, கோசஸ் தலை, பக்கிங்காம் கால்வாய் மற்றும்  சிறு கால்வாய்கள், வெள்ள நீர் வடி கால் கால்வாய்கள் கடலில் சென்று சேரும் பகுதிகளில் கடல் சீற்றம் காரண மாக இந்த நீரைக் கடல் உள்வாங்கா மல் இருக்கிறது. இதன் காரண மாகவே மோட்டார் போட்டாலும் தண்ணீர் குறையாமல் இருக்கிறது. சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங் களுக்கு அலர்ட் விரைவில் மழை குறை யும் என்று எதிர்பார்த்து அதற்கேற்ப செயல்பட்டு வருகிறோம். திங்களன்று  இரவு 8.30 மணிக்கு மழை குறையும்  என்கிறார்கள். சிலர் நள்ளிரவு ஒரு  மணி வரை மழை இருக்கும் என்கிறார் கள். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து  வருகிறோம். கடல் மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை ஆபத்தான இடங்க ளில் இருந்து வெளியேற்றிப் பாது காப்பான இடங்களில் தங்க வைக்க வும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  சவால்களைக் கடந்தும் புயல் வெள்ளத்தை சாமாளிக்க முதல்வர், அமைச்சர்கள், மேயர்கள் ஆலோ சனைப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பொதுமக்கள் வீடுகளைப் பாது காக்க வேண்டும் என்பதால் முகாம் களுக்கு வர மாட்டார்கள். உணவை  மட்டும் அவர்கள் வாங்கிச் செல்வார் கள். அதன்படி திங்களன்று ஒரே நாளில் 2.43 லட்சம் பேருக்கு உணவு  வழங்கப்பட்டுள்ளது. பிரட், பால் பவுடர் வழங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மழையைச் சமாளிக்க  மாநகராட்சி சார்பில் 23 ஆயிரம் பேர்  பணியாற்றி வருகின்றனர். அத்தியா வசிய பணிகளுக்குத் தேவையான நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. 50 சென்டர்களில் உணவு தயாரிக்கும் பணிகள் நடந்து  வருகிறது. தேவைப்பட்டால் தனியார்  ஓட்டல்களில் உணவைத் தயாரிக்க வும் அறிவுறுத்தியுள்ளோம். இரவு மழை குறைந்து கடல் நீரை உள்வாங் கத் தொடங்கியதும் முதலில் பிரதான  சாலைகளில் இருந்து மழை நீர்த் தானாக வடியும். பிறகு மற்ற சாலை களுக்குத் தனிக் கவனம் செலுத்தப் படும். அனைத்து பகுதிகளிலும் நீரை  வெளியேற்ற நடவடிக்கை எடுப்போம்.  சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 6,119 கிமீ சுற்ற ளவில் மழை கொட்டி தீர்த்து இருக்கிறது.  இதை ஒரு நாள் மழைக்குத் தேங்கிய நீர் எனச் சொல்ல முடியாது. அதீத  மழை பெய்ததே நிலைக்குக் காரணம்”  என்றார். தமிழ்நாடு குடிநீர் வழங்கல் செய லாளர் கார்த்திகேயன் ஐஏஎஸ் பேசு கையில், “சென்னையில் 33 செமீ மழை  பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை  காலத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையில் சுமார் 33விழுக்காடு  மழை  கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் பெய்துள்ளது. மேலும், நீர் தேங்கிய தால் 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு உள்ளன. செவ்வாயன்று காலை அவை திறக்கப்படும் என்று எதிர் பார்க்கிறோம்” என்றார்.