நெமிலி, பிப். 18- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பள்ளூர் பழைய காலனி மாரியம்மன் கோவில் பகுதி யைச் சேர்ந்தவர் விவசாயி பாரதி. இவரது மனைவி கஸ்தூரி. இவர்களது மகன் சச்சின் (6). இவர் காஞ்சி புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சச்சி னுக்கு கடந்த 6ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் நெமிலியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த னர். பின்னர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். மேல் சிகிச்சைக் காக மாணவர் அங்கிருந்து மாற்றப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு மாணவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு பரிதாபமாக இறந்தார்.