மத நல்லிணக்கத்தை கூறுபோடும் கேரள ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்யக் கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் சென்னை வள்ளாலார் பேருந்து நிலையம் அருகே மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ஜூகைப் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கார்த்திஷ் குமார், பொருளாளர் எஸ்.ஏ.வெற்றி ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம் ஆகியோர் பேசினர்.