சென்னை, ஏப். 19 - சென்னை நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (எம்யுடிபி), தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (டிஎன்யுடிபி) ஆகியவற்றின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகள் மற்றும் மனை பிரிவு ஒதுக்கீடுதாரர்களுக்கு, கிரைய பத்திரத்தை எஸ்டேட் அலுவலகங்களில் வழங்கும் முறையை தொடர வலியுறுத்தி புதனன்று (ஏப்.19) தா.பி.சத்திரம் நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கட்சியின் அண்ணாநகர் பகுதிக்குழு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் தா.சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் சி.திருவேட்டை, பகுதிக்குழு உறுப்பினர்கள் பெ.சீனிவாசன், முத்துராஜன், மணிகண்டன், கிளைச்செய லாளர் ஆபேல்பாபு உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து நிர்வாக பொறி யாளர் சுடலை முத்துக்குமார் நேரில் வந்து மனுவை பெற்றுக் கொண்டு பேசினார். அப்போது, ‘கிரயப்பத்திரம் வழங்கும் முறையை மீண்டும் தலைமை இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இறுதி முடிவு எடுக்கவில்லை. மனுவை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.