ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரத்தில் வட்டச் செயலாளர் டி.வெங்கடேசன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ப.செல்வன், எம்.தாமோதரன், வே.சங்கர், சதீஷ், மணிகண்டன், இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.