districts

img

வணிகவியல், கணினி அறிவியல் மாணவர்ஆராய்ச்சி மாநாடு

சென்னை, மே 19-  

   தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை இளங்கலை மாணவர்க ளுக்கான ஆராய்ச்சி திட்டத்தை சவீதா லிபரல் ஆர்ட்ஸ் அன்ட் சயின்சஸ் கல்லூரி துவக்கி உள்ளது.  

   இக்கல்லூரி முதல் முறையாக ‘ஸ்டார் மாநாடு’ என்னும் ‘சவீதா பல்துறை வருடாந்திர ஆராய்ச்சி மாநாட்டை’  வணிகவியல், மேலாண்மை, கணினி அறிவியல் மற்றும் கம்ப்யூட்டர் பாடப் பிரிவு மாணவர்களுக்காக நடத்தியது. இந்த மாநாட்டை தமிழ்நாடு திறந்த நிலை பல்லைக்கழக துணை வேந்தர் கே. பார்த்தசாரதி துவக்கி வைத்தார்.

  இதில் சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரி இயக்குநர் ரம்யா தீபக் மற்றும் சவீதா லிபரல் ஆர்ட்ஸ் அன்ட் சயின்சஸ் கல்லூரி முதல்வர் குனிதா அருண் சந்தோக் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற இறுதியாண்டு மாணவர்கள் எஸ்பிஎஸ்எஸ் சாப்ட்வேர் மற்றும் அல்காரிதம் ஆகியவற்றை பயன்படுத்தி போஸ்டர்கள் மூலம் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

  தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 105க்கும் மேற்பட்ட தங்களின் ஆய்வு கட்டுரைகளை இதில் சமர்ப்பித்தனர்.