districts

img

காலநிலை மாற்றத்தால் முந்திரி விவசாயிகள் ரத்த கண்ணீர்! - ஆர்.கே.சரவணன்

கடலூர் மாவட்டத்தில் பிள்ளை போல் வளர்த்த முந்திரி மரங்களை முந்திரி விவசாயிகள் விறகுக்காக வெட்டினார்கள். இந்த வருடம் சுத்தமாக விளைச்சலும் இல்லை விளைந்த முந்திரிக்கு விளையும் இல்லை என்று கூறி விவசாயிகள் கண்ணீர் மல்க மரங்களை வணங்கி விட்டு வெட்டிய காட்சிகள் காண்போரை கலங்க வைத்தது. கடலூர் மாவட்டம், விருத்தா சலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டத்தில்  உள்ள விவசாயிக ளுக்கு முந்திரி சாகுபடி தான் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது.  கடலூர் மாவட்டம் மட்டுமல்ல பக்கத்தில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை போன்ற பகுதிகளில் அதிக அளவில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  இதில் விவசாயிகள் ஆண்டுக்கு ஒரு முறை முந்திரிக்கொட்டை அறுவடை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதில் ஊடுபயிராக மா, பலா வும் நடப்படுகிறது. ஒரு முறை நடவு செய்து பல ஆண்டுகளுக்கு வரு மானம் பார்த்து வந்த விவசாயம் இன்றைக்கு கொஞ்சம் கொஞ்ச மாக அழிந்து வருகிறது. 80 கிலோ மூட்டை குறைந்த பட்சம் ரூ.8500 முதல் ரூ.12000 மற்றும் 14000 வரை விலை போனது.  ஆனால் தற்போது 6000 ரூபாய்க்கு கூட மூட்டையை எடுக்க மறுக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து முந்திரி கொட்டைகள் இறக்குமதி செய்வதால்  விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  ஆண்டுதோறும் வருமானம் ஈட்டி வந்த முந்திரி விவசாயிகள் இப்போது விலையும் இல்லாத மிக மோசமான காரணத்தால் கலங்கிப் போய் நிற்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியின் மிக முக்கிய பங்கு வகித்த முந்திரி வருமானம் இன்றைக்கு மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து இருக்கிறது. பண்ருட்டி நெய்வேலி குறிஞ்சிப் பாடி விருத்தாசலம் உள்ளிட்ட பகுதி களில் சுமார் 17,000 ஹெக்டர் பரப்பளவில் முந்திரி சாகு படி செய்யப்படுகிறது. முந்திரி தொழிலை நம்பி லட்சக்கணக் கானோர் நேரடியாகவும், மறை முகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். தேசிய அளவில் முந்திரி உற்பத்தி மற்றும் விற்பனையில் பண்ருட்டி முக்கிய இடம் பெறுகிறது. காரணம் இங்குள்ள பகுதி முந்திரி சாகுபடிக்கு ஏதுவாக செம்மண் பூமியாக உள்ளது. மேலும் தட்பவெப்ப நிலையும் சீராக இருந்தது. எனவே பண்ருட்டி முந்திரி உலக தரத்தில் சிறந்ததாகவும் சுவை மிகுந்ததாகவும் இருப்பதாக விவசாயிகளும் வியாபாரிகளும் கூறுகின்றனர். சரியான நேரத்தில்  மழைப்பொழிவு இல்லாததால் மிக மோசமான மகசூல் ஏற்பட்டுள்ளது.  முந்திரி பூக்கள் கொத்துக் கொத்தாக கருகி கொட்டிய கொடுமை நிகழ்ந்தது. மேலும் சில இடங்களில் முந்திரி மரங்களே கருகி நின்ற நிலை ஏற்பட்டது.. பருவநிலை மாற்றம், பகல் நேர வெப்பநிலை காற்றில் ஈரப்பதம் குறைவு, அதிகப்படியான பனிப்பொழிவு ஆகியவற்றின் காரணமாக காய் பிடிப்பின் தன்மை குறைந்துள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் வரை பெய்யும் கோடை மழையும் பொய்த்த நிலையில் பூக்களில் பெரும்பகுதி காய்ந்து விடுகிறது. இதன் காரணமாகவே மகசூல் பெருமளவில் குறைந்து விட்டது.  கடந்த 2011 இல் வீசிய தானே புயலில் அளவுக்கு அதிகமான மரங்கள் அழிந்த நிலையில் எஞ்சிய மரங்கள் வெட்டப்பட்டு வரும் சூழலில், பல்வேறு புதிய சாலை விரிவாக்க பணிகள் மற்றும் நகரமயமாக்களால் பல்லாயிரம் ஆண்டு பழமையான மரங்கள் கொடுமையான முறையில் வெட்டப்படுகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் பசுமை போர்வை குறைந்துள்ளதால் பகல் நேர வெப்பம் அதிகரித்துள்ளது.  எனவே தமிழ்நாடு அரசு, கடலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதிக்கப்பட்ட முந்திரி விவ சாயிகளின் பிரச்சனையில் தலையிட வேண்டும். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் முந்திரி விவசாயி களை பாதுகாக்கும் தொடர் போராட்டங் களை நடத்தி வருகிறோம். முந்திரி கொட்டைக்கு கட்டுப்படி யான நிரந்தரமான விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். அரசே நேரடியாக கொள்முதல் செய்வதுதான் முந்திரி விவசாயிகளை பாதுகாத்திடும் முதல் நடவடிக்கையாக இருக்க முடியும். மேலும் தமிழ்நாடு அரசு முந்திரி இறக்குமதியை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.