வண்டலூர்,ஆக.16-
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் (வயது 27), வினோத்(26). பொறியாளர்களான இரு வரும் நண்பர்கள்.
அவர்கள் சென்னை துரைப்பாக்கம் பகுதி யில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். கடந்த 12-ந்தேதி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் செவ்வாயன்று இரவு சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர். நள்ளிரவு 2 மணி அளவில் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப் பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் வந்து கொண்டு இருந்தபோது அங்கு சாலை யோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோதியது. இதில் நண்பர்கள் ராஜ்குமார், வினோத் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் கூடு வாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீ சார் வந்து உயிருக்கு போராடிய 2 பேரை யும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் புதனன்று சிகிச்சை பலனின்றி ராஜ்குமாரும், வினோத்தும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.