மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் ‘தீக்கதிர்’ சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக விரும்பாக்கம் பகுதியில் சேகரிக்கப்பட்ட 35 சந்தாக்களை, மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரனிடம் வழங்கப்பட்டது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் இ.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ரெங்கசாமி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
வேளச்சேரி பகுதிக்குழுவில் சேகரிக்கப்பட்ட 40 சந்தாக்களை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகனிடம் பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக் குழு சார்பில் ‘தீக்கதிர்’ சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக சைதாப்பேட்டை பகுதியில் சேகரிக்கப்பட்ட சந்தாக்களை மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜியிடம், பகுதிக்குழு உறுப்பினர் சுந்தர் வழங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ச.லெனின், ம.சித்ரகலா, பகுதிச்செயலாளர் ஜி.வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.