தருமபுரி நவ-18, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பாப்பிரெட்டி பட்டி வட்ட சிறப்புப் பேரவை கூட்டம் ஞாயிறன்று நடைபெற் றது. வட்டத் தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் அருள் குமார், மாவட்ட துணைச் செயலாளர் குறளரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்திய மாணவர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் தி.வ.தனுசன் வாழ்த்தி பேசினார். பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி துவங்க வேண்டும். அரசு மரவள்ளி கிழங்கு அரவை ஆலை உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த தொழிற்சாலை உரு வாக்க வேண்டும். கடத்தூர், பையர்நத்தம், வெங்கட சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு சட்ட விதிமுறை களை மீறி நெடுஞ்சாலை ஓரம் உள்ள டாஸ்மாக் கடைகள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூராக உள் ளது. இப்பகுதி டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். சுய தொழில் செய்ய விண்ணப்பித்த அனைவருக் கும் வங்கி கடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. பேரவை கூட்டத்தில், புதிய வட்டத் தலைவராக பி.குமரே சன், வட்டச் செயலாளராக செ.குப்பன், வட்டப் பொருளாள ராக சே.ராகப்பிரியா உள்ளிட்ட 13 பேர் கொண்ட புதிய வட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.