திருப்பூர், ஜூலை 20- திருப்பூர் மாநகராட்சி 2ஆவது வார்டுக்கு உட்பட்ட பாண்டியன் நகர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் ஓராண்டுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் இல்லாமல் வீதிகளில் கழிவுநீர் செல்கிறது. இதனால் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையமும் திறக்கப்படாமல் உள் ளது. பாண்டியன்நகர் 2ஆவது வார்டுக்கு உட்பட்ட டீச்சர்ஸ் காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். இந்நிலையில், 3ஆவதி வீதி யில் கழிவுநீர் கால்வாய் இல்லை. 2ஆவது வார்டுக்கு உட்பட்ட மற்ற பகுதிகளில் இருந்து வெளியேற் றப்படும் கழிவுநீர் கால்வாய் 3 ஆவது வீதியுடன் முடிவடைகிறது. அங்கிருந்து கழிவுநீர் வெளியே செல்ல கால்வாய் இல்லாததால் நகர்ப்புற நலவாழ்வு மையம் அரு கில் குளம் போல் தேங்கி நிற்கி றது. இதனால், டீச்சர்ஸ் காலனி 3 ஆவது வீதி குடியிருப்பு பகுதிக் குள் கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்பதுடன், வீடுகளுக்கு இடை யில் ஆறாக ஓடுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின் றோம். கடந்த ஒரு வருடமாக மற்ற பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் இப்பகுதியில் வந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பலமுறை முறையிட் டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனால், இப்பகுதி யில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படு கிறது. நகர்ப்புற மேம்பாட்டு திட்டத் தின் கீழ் கட்டப்பட்ட சுகாதார மைய மும் திறக்கப்படாமல் உள்ளது. மற்ற வார்டுகளில் கட்டப்பட்டுள்ள சுகாதார நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டுவரும் நிலையில், எங் கள் பகுதியில் இன்னும் திறக்கப்ப டாமல் உள்ளது. ஆறு மாதத்திற்கு முன்பு பல அதிகாரிகள் இப்பகு தியில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பின் எந்த முன்னேற்ற மும் இல்லை. பழைய நிலையே நீடிக்கிறது. கடந்த மாதம் கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் செல்லா மல் இருக்க சுகாதார நிலையம் அருகில் குழி தோண்டி அதில் கழிவு நீரை சேமித்து, வாரம் இரு முறை சுத்தம் செய்வதாகத் தெரி வித்து, குழியும் தோண்டினார்கள். ஆனால், தற்போது அந்த குழியில் கழிவுநீர் நிரம்பி அருகாமையில் உள்ள குடியிருப்புகளுக்குள் சென்று கொண்டிருக்கிறது. சுத் தம் செய்ய யாரும் வருவதில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுக ளாக கழிவுநீருக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மழை பெய்தால் கழிவுநீர் வீடுக ளுக்குள் புகுந்து விடுகிறது.
அதிக அளவில் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்துகிறது. மோசமான துர்நாற்றம் வீசுகிறது. உணவு உண்ணக்கூட முடிவ தில்லை. உறவினர்கள் யாரும் வரு வதில்லை. வீடுகளுக்குள் செல்ல நாங்களே முயற்சி செய்து கற் களை வைத்து, அதன் மீது நடக்கி றோம் என்றனர். இதுகுறித்து 2ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் தரப்பில் கூறி யதாவது, இப்பகுதியில் பல ஆண் டுகாலமாக கழிவுநீர் கால்வாய் பிரச்சனை உள்ளது. டீச்சர்ஸ் காலனி 3ஆவது வீதியுடன் 2ஆவது வார்டு முடிவடைகிறது. அதற்கு அடுத்த தெரு, 1ஆவது வார்டு என்பதால கால்வாய் அமைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. மேலும், சாக் கடை கால்வாய் செல்லக்கூடிய பகுதி தனியாருக்கு சொந்தமா னது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாநகராட்சி கூட்டத்தில் இது தொடர்பாக பேசியுள்ளோம். மேலும் இது தொடர்பாக மனுவும் அளிக்கப்பட்டது. அதைத்தொ டர்ந்து மாநகராட்சி மேயர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். இடம் உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதைய டுத்து அவரும் மாநகராட்சிக்கு 10 சென்ட் இடம் தர ஒப்புகொண்டு விட்டார். அதற்கான படிவம் மாநக ராட்சியில் ஒப்படைக்கப்பட்டுள் ளது. முறையாக சாக்கடை கால் வாய் கட்ட நிதி ஒதுக்கி இன்னும் மூன்று மாதங்களுக்குள் இப்பிரச்ச னைக்கு உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.