சுகாதாரத் துறையில் பணி நெருக்கடியை ஏற்படுத்தும் நிலையை மாற்ற வேண்டும் என வலியு றுத்தி, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் வியாழனன்று சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரபாகரன், செயலாளர் சண்முகம், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், இணைச்செயலாளர் திரு நாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.