ஈரோடு, பிப். 15- பவானிசாகர் பகுதியில் மின் ஊழி யர் தாக்கப்பட்ட சம்பவத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல் துறையை கண்டித்து மின் ஊழி யர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பிரிவு அலுவலகத்தில் வெள்ளி யன்று சிறப்பு நிலை முகவர் மற்றும் மின் பாதை ஆய்வாளர் ஆகியோர் பராமரிப்பு பணி செய்து கொண்டி ருந்தனர். அப்போது மின்மாற்றிக்கு எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையார் தகாத வார்த்தைகளை பேசி, பணி செய்ய விடாமல் தடுத் துள்ளார். மேலும் சிறப்பு நிலை முகவ ருக்கு கொலை மிரட்டல் விடுத்துள் ளார். அத்துடன் அவரது பெட்ரோல் பங்கில் வேலை செய்த தொழி லாளியை ஏவி கற்களால் தாக்கியுள் ளார். இது தொடர்பாக பவானிசாகர் காவல் நிலையத்தில் கொலை மிரட் டல் விடுத்து, அடியாளைக் கொண்டு தாக்கிய இருவரையும் உடனடியாக கைது செய்திட வேண்டும் என புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சனியன்று வரை காவல் துறையினர் எவ்வித நடவ டிக்கை எடுக்கவில்லை. இதனை யடுத்து, சம்பந்தப்பட்ட இருவரை யும் கைது செய்யும் வரையில் கலை யமாட்டோம் என அனைத்து தொழிற் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு நிர் வாகிகள் மற்றும் பவானிசாகர் கோபி கோட்ட பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு காத்திருக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர்.