districts

திருப்பூரில் வேலையின்மையும்; வேலைவாய்ப்பு திருவிழாவும்

வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர் மாந கரம் தற்போது தொழில் நெருக்கடியில் கடு மையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அண்மைக்  காலம் வரை திரும்பிய பக்கமெல்லாம் “வேலைக்கு ஆட்கள் தேவை” என்ற விளம்ப ரங்கள் இருக்கும். ஆனால் இப்போது கடை கள் வாடகைக்கு, வீடுகள் வாடகைக்கு, கம் பெனி வாடகைக்கு என்ற விளம்பரங்கள் பல  பகுதிகளிலும் தொங்கிக் கொண்டிருக்கின் றன. ஏராளமான தொழிலாளர்கள் வேலை  இழந்து வேறு வேலைகளுக்கும், சொந்த  ஊர்களுக்கும் சென்றுவிட்டனர். இப்போது  இங்கிருக்கும் தொழிலாளர்களுக்கும் சொற் பமான வேலை வாய்ப்பே கிடைக்கிறது. அதி லும் வருமானம் குறைந்து மக்கள் திண்டாடிக்  கொண்டிருக்கின்றனர். முன்னெப்போதும் இல்லாத நிலையை திருப்பூர் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

வேலைவாய்ப்பு முகாம்

இது ஒரு புறம் இருக்க தமிழ்நாடு அரசு,  திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் மாந கராட்சி இணைந்து பிப்ரவரி 11ஆம் தேதி  சனிக்கிழமை திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி  வளாகத்தில் “மாபெரும் வேலை வாய்ப்பு  திருவிழாவை” வெற்றிகரமாக நடத்தி முடித் துள்ளனர். வேலைவாய்ப்பு திருவிழா நடத் துவது வரவேற்கத்தக்கது தான். 550 நிறுவ னங்கள் பங்கேற்று சுமார் 50,000 பேருக்கு  வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரம் மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டன.  மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்,  மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். ஒரு நாள் நடைபெற்ற இந்த வேலை  வாய்ப்பு முகாமில் மொத்தம் 520 நிறுவனங் கள் பங்கேற்றன. வேலை வாய்ப்பு கேட்டு 29  ஆயிரத்து 780 பேர் பங்கேற்றனர். 8,937  பேருக்கு வேலை நியமன ஆணை வழங்கப் பட்டுள்ளது. தொழில் மாவட்டமான திருப்பூ ரில் ஏறத்தாழ 30 ஆயிரம் இளைஞர்கள்  வேலை வாய்ப்பு கேட்டு திரண்டனர் என்ப தும், அதில் சுமார் 9000 பேருக்கு வேலை  வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதும்  கவனிக்கத்தக்கது.

சிக்கித் தவிக்கும் சிறுதொழில்கள்

இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்தப டியாக, மிகப்பெருமளவு வேலைவாய்ப்பு  வழங்கக்கூடிய பின்னலாடை, விசைத்தறி  உள்ளிட்ட ஜவுளி தொழில்களை அரசுகள்  கண்டு கொண்டாலே லட்சக்கணக்கானவர் களுக்கு வேலை வழங்க முடியும். ஆனால்  பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு,  நூல் விலை, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு,  தொழில் வரி உயர்வு என அடுத்தடுத்து தொடர்  தாக்குதல்களால் இத்தொழில்கள் நிலைகு லைந்து போய் உள்ளன. இந்த விசயங்களில் தொழில் துறையினரின் கோரிக்கைகளை  காது கொடுத்து கேட்டு அவற்றை நிறைவேற் றினாலே ஏற்கெனவே இருக்கும் வேலை வாய்ப்பைப் பாதுகாக்க முடியும், கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.  ஆனால் மோடியின் ஒன்றிய அரசு, அதா னிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏனோ  இந்த தொழில் துறையினருக்குத் தர மறுக் கிறது.

அரசுப் பணியிடங்கள் அவலம்

இது ஒரு புறம் இருக்க, தமிழ்நாட்டில் அரசு துறைகளில் 6 லட்சம் காலி பணியி டங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை  நிரப்பினாலே படித்தவர்களுக்கு கண்ணிய மான வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இதைச் செய்யாதது மட்டுமின்றி, உள்ளாட்சி களில் தற்போது இருக்கும் தூய்மைப்பணி,  குடிநீர் வழங்கல் உள்ளிட்ட அடிப்படையான  வேலைகளிலும் நிரந்தரப் பணியிடங்களை ஒழித்துக் கட்டும் அரசாணையை மாநில அரசு  பிறப்பித்துள்ளது. அதற்குப் பதிலாக தனி யார் ஒப்பந்ததாரர்கள், அவுட் சோர்சிங்  முறைக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள் ளது. இது போல் அரசுத் துறை சார்ந்த பல் வேறு பணிகளிலும் நிரந்தரத்தன்மை இல் லாமல் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மாறிவரும் அடிப்படை குணம்

குடிமக்களுக்கு கல்வி கொடுத்து,  வேலை வாய்ப்பை உருவாக்குவது மக் கள் நல அரசுகளின் அடிப்படை கடமை.  ஆனால் இப்போது கார்ப்பரேட் பெருமுத லாளிகளின் நலன் காக்கும் அரசுகளாக மாற் றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மக் கள் நலன் சார்ந்த விசயங்கள் கைவிடப்பட்டு  கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியா கவே அரசுத் துறை உள்பட நிரந்தரத் தன்மை  கொண்ட சட்ட, சமூகப் பாதுகாப்பு உள்ள  வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. இதனால்  வேலை வாய்ப்பு அலுவலகங்கள் அதன்  அடிப்படை அர்த்தத்தை இழந்து கொண்டி ருக்கின்றன. படித்து விட்டு வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து, காத்திருக்கக்  கூடியவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதி கரித்துக் கொண்டிருக்கின்றன.அவர்களின்  கல்வித் தகுதிக்கு உரிய சட்டசமூகப் பாது காப்பு கொண்ட வேலைவாய்ப்பை வழங்கு வது அரசுக்கு சவாலாக மாறியுள்ளது. இத னால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பதிவு  செய்திருப்போரின் எண்ணிக்கையைக் காட் டும் புள்ளி விவர நிறுவனங்களாக மாறிக்  கொண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில்தான் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் இது போன்ற  தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்து வதை அரசு திட்டமிட்ட முறையில் முன்னெ டுக்கின்றது. அதன் ஒரு பகுதியாகவே சனி யன்று திருப்பூரில் வேலை வாய்ப்புத் திரு விழா நடத்தப்பட்டது என்பதைப் பார்க்க  வேண்டும். இந்த திருவிழாவில் வேலை  கேட்டு வந்த ஆயிரக்கணக்கான இளைஞர் களின் முகக்குறிகள் அவர்களின் வாழ்க்கைத்  தவிப்பைக் காட்டுவதாக இருந்தன. கண்ணி யமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரக் கூடிய, படித்த படிப்பிற்குஏற்ற வேலை, நியா யமான ஊதியம், சட்டப் பாதுகாப்பு என்று  எதிர்பார்த்து வந்தாலும், அவை எதுவும் இல் லாமல், அந்த இளைஞர்கள் தனியார் நிறு வனங்களால் பொறுக்கிக் கொள்ளப்பட்ட னர். பல தொழில் நிறுவனங்கள் அறிவித்த  வேலை வாய்ப்புக்கும், அங்கே கொடுத்த  வேலை வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லாமல்  இருந்தது. எனினும் அந்த வேலைகூட கிடைக் காமல் போனால் என்னாவது என்று இளை ஞர்கள், நிறுவனங்களின் எல்லா நிபந்தனைக ளுக்கும் எவ்வித பேரமும் பேசாமல் ஒப்புக்  கொண்டனர். இதுதான் இன்றைய வேலை வாய்ப்பின் நிலை.

பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கார்ப்பரேட் கொள்கைகளால் விவசாய மும், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களும்  புறக்கணிக்கப்படும் நிலையில், வேலை யில்லா திண்டாட்டம் பெரும் பிரச்சனையாக  தலைவிரித்து ஆடுகிறது. இதனால், ஏற்படும் வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வும் முடியாது, அதனால் விளையும் சமூகக்  கோபத்தை யாராலும் எளிதில் அடக்கி விட வும் முடியாது. எனினும் அதை தணிக்கும்  விதத்தில் அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிக் கொண்டிருப்பதாக காட்டு வதற்குத்தான் இந்த முகாம் நடத்தப்படு கிறது. பல ஆயிரம் பேர் வேலை இழந்து  தவிக்கும் திருப்பூரில், புதிய வேலை வாய்ப்பை நாடி வந்த 30 ஆயிரம் பேரில், 9  ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப் பட்டிருப்பது சொற்பம்தான்.  ஆனால், அதைக்  கூடச் செய்யாமல் பாராமுகமாக இருக்கிறது  ஒன்றிய அரசு. இதுவே, வேலைவாய்ப்பு  நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருப்பூரில்  நடத்தப்பட்ட “வேலை வாய்ப்பு திருவிழா” அரங்கேற்றத்தின் அடிப்படை உண்மை.

          -வே.தூயவன்