districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

சேலம், டிச.17- ஆத்தூர் அருகே முட்டல் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில்  குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வராயன் மலையடிவாரத் தில் உள்ளது. முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி வனத் துறையின் சூழல் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு  வருகிறது. ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டு மின்றி சேலம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் உள் ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணி கள் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குளித்தும், முட்டல் ஏரிப்  பகுதியில் படகு சவாரி செய்து வருவது வழக்கம்.

இந் நிலையில், கடந்த டிச.11 ஆம் தேதி முதல், கல்வராயன்  மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால்,  நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டிய தால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தண்ணீர் வரத்து சீரானதால் ஆறு நாட்களுக்குப் பின்பு சுற்று லாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையி னர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் மகிழ்ச்சி யடைந்த சுற்றுலாப் பயணிகள் செவ்வாயன்று உற்சாக மாக குளித்து மகிழ்ந்தனர்.

வடமாநில தொழிலாளர்கள் கொலை!

நாமக்கல், டிச.17- பள்ளிபாளையம் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த  தொழிலாளர்கள் 2 பேர் கொடூரமாக கொலை செய்யப் பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே உள்ள  பாதரை பகுதியில் செயல்படும் தனியார் நூற்பாலை யில் தங்கி, ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த துபலேஷ் மற்றும்  முன்னா ஆகியோர் வேலை செய்து வந்தனர்.

இந்நிலை யில், இருவரது தலையில் கல்லால் தாக்கி செவ்வா யன்று கொலை செய்யப்பட்டதாக வெப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம் பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலங்களை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதையடுத்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் மூலம் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், சம்பவ இடத்தில் கோவை சரக ஐ.ஜி செந்தில் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்  கண்ணா, கூடுதல் கண்காணிப்பாளர் சண்முகம் உள்ளிட் டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதை யடுத்து நடைபெற்ற விசாரணையில், துபலேஷ் மற்றும்  முன்னா ஆகியோருக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும், இருவரும் பணிபுரியும் இடத்திலேயே  தாக்கிக் கொண்டதாகவும் தெரிகிறது.

மேலும், நூற்பாலையில் தங்கும் விடுதியில், முன்னா  மற்றும் துபலேஷ் தங்கும் அறையில் மேலும் ஆறு நபர் கள் உடன் தங்கியிருந்தது தெரியவந்ததையடுத்து, அவர்களுடன் தங்கியிருந்த மற்ற வடமாநில தொழிலா ளர்களிடம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். இவ்வழக்கில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமை யில், ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வட மாநிலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அணைகள் நிலவரம் (செவ்வாய்க்கிழமை)

பவானிசாகர் அணை
நீர்மட்டம்:99.48/105அடி 
நீர்வரத்து:1548 கனஅடி
நீர்திறப்பு:2700 கனஅடி
மேட்டூர் அணை
நீர்மட்டம்:118/120 அடி
நீர்வரத்து:7368 கனஅடி
நீர்திறப்பு:1300 கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:140.03/160அடி
நீர்வரத்து:116.50கனஅடி
நீர்திறப்பு:338.95கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:67.74/72 அடி
நீர்வரத்து:493கனஅடி
நீர்திறப்பு:932கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:118.25/120அடி
நீர்வரத்து:701கனஅடி
நீர்திறப்பு:214கனஅடி
திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:52.57/60அடி 
நீர்வரத்து:942கனஅடி
நீர்திறப்பு:968கன அடி

சின்னாறு உபரிநீரை ஏரிகளில் நிரப்பக் கோரிக்கை

தருமபுரி, டிச.17- பஞ்சப்பள்ளி சின்னாற்றின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பக் கோரி, அப்பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்த னர்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதிக ளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயி கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்போது பரு வமழை பெய்து, பஞ்சபள்ளி சின்னாறு அணை நிரம்பி, உபரி நீர் பாலக்கோடு வழியாக எர்ரனஹள்ளிக்கு வருகிறது.

இதனை பனைகுளம் ஏரியிலிருந்து பாப்பாரப்பட்டி ஏரி,  சஜ்ஜலஹள்ளி ஏரி, பாலவாடி பெரிய ஏரி, வேலம்பட்டி ஏரி,  பள்ளப்பட்டி ஏரி, ஆண்டாரஹள்ளி ஏரி, எட்டியாம்பட்டி அம்மன் ஏரி, காஞ்சன்குட்டை ஏரி, பிலப்பநாயக்கனஹள்ளி ஏரி, தட்டாரப்பட்டி ஏரி, எர்ரப்பட்டி ஏரி, பூகானஹள்ளி ஏரிக ளில் நிரப்பினால் இறுதியாக சோகத்தூர் எரிக்கு சென்றடை யும். இதன் காரணமாக 16 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள்  பாசன வசதி பெறும்.

எனவே, எர்ரனஹள்ளி கால்வாய் வழி யாக பஞ்சப்பள்ளி சின்னாற்றின் உபரிநீரை அனைத்து ஏரி களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலி யுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கம்பிகளை திருடிய 2 பேர் கைது

சேலம், டிச.17- கொண்டலாம்பட்டியில் கட்டுமானப் பணிக்கு வைத் திருந்த, ரூ.2.65 லட்சம் மதிப்பிலான கம்பிகளை திருடிய 2  பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், அமானி கொண்டலாம்பட்டி, காட்டூ ரில் சாக்கடை கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது.  ஒப்பந்தம் எடுத்துள்ள பனமரத்தப்பட்டியைச் சேர்ந்த முருகன்  என்பவர், 97 இரும்பு கம்பிகளை அங்கு வைத்திருந்தார். தொடர் மழையின் காரணமாக பணிகள் தடைபட்டதால், அதே  இடத்தில் இரும்பு கம்பிகள் இருந்துள்ளன. இந்நிலையில், அதில் 53 சென்ட்ரிங் கம்பிகள் திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து முருகன் கொண்டலாம்பட்டி காவல்  நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மணியனூ ரைச் சேர்ந்த குரு பிரசாத் (20), வெங்கடேஷ் (20) ஆகி யோர், கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசா ரித்தபோது, இரும்பு கம்பிகளை திருடி விற்று அந்த பணத்தைக் கொண்டு மது அருந்தியது தெரியவந்தது. தொடர்ந்து, கம்பிகளை வாங்கியவரிடமிருந்து ரூ.2.65 லட்சம்  மதிப்புள்ள கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.