districts

img

தேசிய அளவிலான கராத்தே போட்டி திருப்பூர் அரசு பள்ளி மாணவி சாதனை

திருப்பூர், டிச.21- டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி வெண் கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். தேசிய அளவிலான கராத்தே போட்டி கடந்த 15 ஆம் தேதி  முதல் 20  ஆம் தேதி வரை புதுடெல்லி சத்ரசால் மைதானத் தில் ஸ்கூல் கேம்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா சார்பில்  நடைபெற்றது. இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களை  சேர்ந்த 150 கராத்தே மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.  இதில் தமிழ்நாடு சார்பில் திருப்பூர் புது ராமகிருஷ்ணபுரம் அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்தவரும் சஸ்மிதா கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினார். இதில் இரண்டா வது பரிசாக வெண்கல பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார். வியாழனன்று பள்ளி வந்த மாணவி சஸ்மி தாவை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மாலை அணி வித்து மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.