பூம்புகார் விற்பனை நிலையத்தில் திருட்டு
கோவை, செப்.1- கோவை பூம்புகார் விற்பனை நிலையத்திலிருந்த பணத்தை திருடிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். கோவை மாவட்டம், டவுன்ஹால், மணிக்கூண்டு பி.பி.தெருவில் பூம்புகார் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகி றது. இதன் மேலாளராக காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஆக.24 ஆம் தேதியன்று கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் திருடப்பட்டது. இதுகுறித்து ஆனந்தன் உக்கடம் காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், சனியன்று இரவு சந்தேகத்திற் கிடமாக சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயராகவன், கொல்கத்தாவை சேர்ந்த ஹக்கீம் என்பதும், இருவரும் கோவை அருகே உள்ள நூல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருவதும், மது போதையில் பூம்புகார் விறைபனை நிலையத்தில் பணத்தை திருடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர், இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
அதிகளவில் குவிந்த மக்களால் போக்குவரத்து நெரிசல்!
கோவை, செப்.1- சூலூரிலுள்ள பேன்சி கடை ஒன்றில் 50 ரூபாய்க்கு விற் பனை செய்யப்பட்ட செருப்புகளை, வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை மாவட்டம், சூலூர், திருச்சி சாலையில் பவானி பேன்சி & புட்வேர் என்ற தனியாருக்கு சொந்தமான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடையில், 50 ரூபாய் விலையில் செருப்புகள் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத ளங்களில் தகவல் பரவியது. இந்த தகவல் பரவிய சில மணி நேரங்களுக்குள் ஏராளமான வாடிக்கையாளர்கள் அந்த கடைக்கு படையெடுத்தனர். கடையின் முன்பாக கொட்டி வைக்கப்பட்டிருந்த பிராண்டட் செருப்புகள் மற்றும் ஷூக் களை 50 ரூபாய் என்ற ஆபர் விலையில் அள்ளிச் சென்றனர். பலர் செருப்புகளை வாங்கும் ஆர்வத்தில் சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றதால் திருச்சி சாலை யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எரிசனம்பட்டி சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை
உடுமலை, செப். 1- கிராமப்புற மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில், உடுமலை ஒன்றியத்திற் குட்பட்ட எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம் படுத்த பட்ட சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகா தார நிலையம், தலைமை சுகாதார நிலையமாக செயல்படுகிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தின் கட்டுப்பாட்டில் தளி, திரு மூர்த்தி நகர், ராவணாபுரம், ஜல்லி பட்டி, கொங்கல குறிச்சி, கொடிங்கி யம் உள்ளிட்ட எட்டு துணை சுகாதார நிலையங்களும், மலைவாழ் குடியி ருப்பு பகுதியான பூச்சிக்கொட்டாம் பாறை, கருமுட்டி, காட்டுப்பட்டி, மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை உள்ளிட்ட செட்டில்மெண்ட் பகுதிக ளும் இந்த சுகாதார நிலைய கட்டுப் பாட்டில் உள்ளது. எரிசனம்பட்டி சுகாதார நிலையத்திற்கு கிராமப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அதிகமாக வரும் நிலையில், போதிய வசதிகள் இல்லாமல் உள் ளது. ஆரம்பகால மக்கள் தொகை யின் படியே மூன்று மருத்துவர்கள், குறைந்த எண்ணிக்கையில் சுகா தார ஆய்வாளர்கள் மற்றும், செவி லியர்கள் பணியாற்றி வருகின்ற னர். தினமும் சராசரியாக 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், மாதத்திற்கு 100க்கணக்கான கர்ப் பிணி பெண்களும் பரிசோதனைக ளுக்கு இந்த ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு வந்து செல்கின்றனர். சிகிச்சைக்கு வரும் நோயாளிக ளின் எண்ணிக்கை அதிகரித்தும், போதுமான வசதிகள் மேம்படுத்தப் படாமல் உள்ளது. சராசரியாக பத்து உள்நோயாளி அனுமதிக்கப்படு கின்றனர். ஆனால், ஆறு படுக்கை கள் மட்டுமே உள்ளன. இதனால் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள் ளாகி வருகின்றனர். கூடுதலாக படுக்கை வசதி ஏற்படுத்த வேண் டும் என பல முறை அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் செட்டி மெண்ட் பகுதி மக்களுக்காக மாவ டப்பில் செயல்பட்டு வந்த துணை சுகாதார நிலையம் தற்போது செயல்பாட்டில் இல்லாததால், அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்து வர்கள் மற்றும் செவிலியர்கள் செட் டில்மெண்ட் பகுதிக்கு செல்கின்ற னர். இதனால் சுகாதார நிலையத் திற்கு வரும் புற நோயாளிகள் பல மணி நேரம் சிகிச்சைக்காக காத்தி ருக்க வேண்டிய நிலை ஏற்படுகி றது. சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் இதர பணிகளுக்கு மருத்துவர்கள் செல்லும் நிலையில் கிராமப்புற மக்களுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதில்லை. புறநோயாளி கள் எண்ணிக்கையின் அடிப்படை யில், எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை சிறப்பு மருத்துவர் கள் மற்றும் அதிக படுக்கை வசதி கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
உடுமலை தாலுகா மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் கடந்த வாரத்தில் மட்டும் நான்கு பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இவர் களின் சிகிச்சைக்காக மலைப்பாதையில் தொட்டில் கட்டி தூக்கி வந்து உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற அரசின் முடிவு அனைத்து மக்களுக்கும் சென்று அடையும் வகையில், மலை அடிவார பகுதியில் இருந்து மலைவாழ் மக்கள் குடியிருப்பு வரை சாலை வசதி ஏற்படுத்தி, முறையான மருத்துவம் சென்றடைய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை வைத்து உள்ளது.
திருப்பூரில் இன்று தந்தை பெரியார் குறித்து பேச்சுப்போட்டி
திருப்பூர், செப். 1- தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி வருவதை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பெரி யார் குறித்து பேச்சுப்போட்டி திங்களன்று நடத்தப்படுகிறது. திருப்பூர் நடராஜா தியேட்டர் சாலையில் உள்ள தெற்கு ரோட்டரி சங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இப் போட்டியில் எட்டு தலைப்புகளில் ஒன்றில் போட்டியாளர் கள் பேச வேண்டும். ஒரு கல்லூரிக்கு ஐந்து நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். முதல் பரிசு ரூபாய் 3000, இரண்டாம் பரிசு ரூபாய் 2000, மூன்றாம் பரிசு ரூபாய் 1000 வழங்கப்ப டும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கலைஞரின் வருமுன் காப்போம் முகாம்
திருப்பூர், செப்.1- ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் அரசுப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத் துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் இம் முகாமை தொடங்கி வைத்தார். இதைத் தொடா்ந்து, பெண்க ளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் இல்லம் தேடி மருத்து வத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கியதுடன், அரசின் நலத் திட்டங்கள் குறித்து பேசி னார். மருத்துவக் குழுவினர் 1,037 பேருக்கு மருத்துவப் பரிசோ தனை மேற்கொண்டனர். அதில், கண் புரை அறுவை சிகிச் சைக்கு 6 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். 37 பேருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தற்காலிக பேராசிரியர்கள் உட்பட 4 பேர் கைது
கோவை, செப்.1- வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவி களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தற்காலிக பேராசிரியர்கள் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், வால்பாறையில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், வெளியூர்களைச் சேர்ந்த மாணவிகள் சிலர் வால்பாறை அரசு மகளிர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆக.30 ஆம் தேதி யன்று தேசிய மகளிர் ஆணையம் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நிர்வாகி கிருஷ்ணவேணி தலைமையிலான குழு வினர், வால்பாறை கல்லூரிக்கு விழிப்புணர்வு சம்பந்தமாக வருகை தந்துள்ளனர். அப்போது மாணவிகளிடம் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? படிக்கும் இடத்தில் தொந்தரவு உள் ளதா? சமுதாயத்தில் தொந்தரவு உள்ளதா? போன்றவை கள் கேட்கப்பட்டன. அப்போது 7 மாணவிகள் கல்லூரியில் பேராசிரியர்கள் உட்பட சிலர், எங்களை தொட்டு பேசுதல், ஆபாசமாக பேசுதல் அலைபேசிக்கு தவறான மெசேஜ் அனுப் புதல் போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். இதனால் எங்க ளால் படிக்க இயலவில்லை. நாங்கள் வெளியூருக்கே செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக வால்பாறை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வால்பாறையில் மகளிர் காவல் நிலை யம் இல்லாததால், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறை ஆய்வாளர் தலைமையில் வால்பாறை கலைக்கல்லூரி மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளில் விசாரணை மேற் கொண்டனர். இதில், தற்காலிக பேராசிரியர்கள் இரண்டு பேர் மற்றும் ஆய்வுக்கூட உதவியாளர், என்சிசி பயிற்சியாளர் ஆகி யோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் பாலியல் சீண்டல் குற்றத்தின் கீழ், காவல் துறையினர் கைது செய்த னர்.
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
சேலம், செப்.1- சேலம் அரசு பொறியியல் கல்லூரியில், தேசிய தர மதிப் பீடு மற்றும் அங்கீகாரக் குழுவினர் (நாக்) சனியன்று ஆய்வு செய்தனர். கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்திடும் வகை யில், ஒன்றிய அரசு சார்பில் தேசிய அளவிலான தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இப்பட்டிய லில் இடம்பெறும் வகையில் ஹைதராபாத் ஜவாஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழக இயக்குநர் கோவர்தன் தலைமையில், மூன்று பேர் கொண்ட குழுவினர் சேலம் அரசு பொறியியல் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், ஆய் வகங்கள், அடிப்படை வசதிகள் குறித்து சனியன்று ஆய்வு செய்தனர். சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் ரா. விஜயன், கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி திட்டங்கள் குறித்து குழுவினரிடம் விளக்கினர். துறைத் தலை வர்கள், பேராசிரியர்கள் தேவையான ஆவணங்களை குழு விடம் வழங்கினர். உள்தர மதிப்பீட்டு மைய இயக்குநர் எஸ். சிவலட்சுமி உள்ளிட்ட பேராசிரியர்கள் ஆய்வின் போது உடனிருந்தனர்.
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி
நாமக்கல், செப்.1- உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர் களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் ஞாயிறன்று நடை பெற்றது. நாமக்கல் மாவட்ட ரக்பி சங்கத்தின் சார்பில், மாவட்டத்தி லுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியா ளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி விளையாட்டு மைதானத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. இதில், சுமார் 50க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ரக்பி சங்கத்தின் துணைச்செயலாளர் சாகுல் ஹமீத், சென்னையைச் சேர்ந்த ரக்பி விளையாட்டு வீரர் வெங்கட், வீராங்கனை நிவேதிதா, ரக்பி நடுவர் முகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, ரக்பி விளையாட்டின் முறை கள் குறித்து விளக்கம் அளித்தனர். இதன்பின் அனை வருக்கும் ரக்பி விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய கிட் பேக் மற்றும் பயிற்சி கையேடுகளை நாமக்கல் மாவட்ட ரக்பி சங்கத்தின் தலைவர் சதீஷ்சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.
“உலக கடிதம் தினம்” கொண்டாட்டம்
நாமக்கல், செப்.1- குமாரபாளையத்தில், “உலக கடிதம் தினம்” ஞாயி றன்று கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வேதாந்தபுரம் பகுதியில், சுதந்திர போராட்ட தியாகி பூலித் தேவன் பிறந்தநாள் மற்றும் உலக கடிதம் தினம், ஞாயிறன்று கொண்டாடப்பட்டது. விடியல் ஆரம்பம் பவுண்டேசன் சார் பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பூலித்தேவன் வரலாற்றை சமூக ஆர்வலர் ஜமுனா எடுத்துரைத்தார். உலக கடிதத் தினத்தையொட்டி, தபால் அட்டை மற்றும் எழுதுகோல் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி கடிதம் எழுதும் பயிற்சி வழங்கப்பட்டது. இன்றைய கம்ப்யூட்டர் உலகில் கடிதம் எழுதுவது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாக மாறி விட்டது. இன்றைய காலத்தில் கடிதம் எழுதுவோரை போற் றிக் கொண்டாட வேண்டும் என விடியல் பிரகாஷ் தெரிவித் தார். இவ்விழாவில், பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன.
மேட்டூர் அணையில் ஆய்வு
சேலம், செப்.1- மேட்டூர் அணையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை யால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந் நிலையில், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறி யாளர் தயாளகுமார், மேல்காவேரி வடிநில வட்ட சேலம் கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் சனி யன்று மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். மோட் டார் படகில் சென்று நீர்த்தேக்க பகுதிகளின் கரைகளை ஆய்வு செய்தனர். இதன்பின் திப்பம்பட்டியில் அமைந்துள்ள மேட்டூர் அணை உபரிநீர் திட்ட பிரதான நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் நீர்வளத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சாலை விபத்தில் ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்
நாமக்கல், செப்.1- ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை யில் நிகழ்ந்த கோர விபத்தில் ஆட்டோ ஓட்டு நர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயங்க ளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில் இருந்து பெங்களூருவிற்கு சமையல் வேலை செய்வதற்காக ஆட்டோ வில் ஏழு பேர் சென்று விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நி லையில், ஞாயிறன்று அதிகாலை நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆட்டை யாம்பட்டி பிரிவு, தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நடுரோட்டில் நின்றிருந்த லாரி பின்புறம், ஆட்டோ பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் தட்சிணாமூர்த்தி உட் பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதன்பின் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அடிப் பட்டவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் தட்சணாமூர்த்திக்கு அதிக ரத்தம் வெளியேறி யதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார். மேலும், 5 பேர் பலத்த காயம டைந்த நிலையில், ராசிபுரத்தில் முதலுதவி செய்யப்பட்டு சேலம் அரசு மருத்துவமனை யில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளனர். இவ்விபத்து குறித்து வெண்ணந் தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம்
நாமக்கல், செப்.1- காலாவதி சுங்கச்சாவடிகளை அகற்ற வும், கட்டண உயர்வை திரும்பப்பெறவும் வலியுறுத்தி, நாமக்கல் கீரம்பூர் சுங்கச் சாவடியை செப்.4 ஆம் தேதியன்று முற்றுகை யிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ள தாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்ல.ராசாமணி, நாமக்கல்லில் சனியன்று செய்தியாளர்களிடம் கூறுகை யில், அரசு மணல் குவாரிகளிலும், விற்ப னைக் கிடங்குகளிலும் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்தனர். அதன்பிறகு, மணல் குவாரி கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், மாநிலம் முழுவதும் 55 ஆயிரம் மணல் லாரி கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலை யின்றி தவித்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் கட்டுமானப் பணிகள் சரிவர நடை பெறவில்லை. இதனைப் பயன்படுத்தி எம்.சாண்ட் விலையை உயர்த்திவிட்டனர். தரமற்ற வகையில் விற்பனை செய்யப்படும் இந்த வகை மணலால், கட்டடங்கள் நிலைத்து நிற்கும் தன்மையை இழந்து விரைவில் இடிந்து விழுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அனைத்து அரசு மணல் குவாரிகளையும் உடனடியாகத் திறக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 22 சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். 20 கி.மீ.க்குள் வசிக்கும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்கக்கட்ட ணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் செப்.4 ஆம் தேதியன்று (புதன்கிழமை), நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என்றார்.