திருப்பூர், மார்ச் 22 – திருப்பூர் மாநகராட்சி, 44, 45 மற்றும் 50 ஆகிய வார்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கோடை காலத் தில் வெப்பத்தை தணிக்கும் வகையில், குர்பானி மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் குடைகள் வழங்கப்பட் டது. கோடை வெயில் தொடங்கியிருக்கும் நிலையில் மாநக ராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு திருப் பூர் குர்பானி அறக்கட்டளை சார்பில் குடை வழங்கப்பட் டுள்ளது. குர்பானி அறக்கட்டளை சார்பில் குடை வழங்கும் நிகழ்வு செவ்வாயன்று அறக்கட்டளைத் தலைவர் எம்.அகமது பைசல் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் - காங்கேயம் சாலை, சிடிசி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையா ளர் பவன்குமார், கிட்ஸ் கிளப் குழும தலைவர் கே.மோகன் கார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் கண்ணப்பன், பாத்திமா தஸ் ரின், பெனாசீர் நசுருதீன் உள்பட பலர் கலந்து கொண்ட னர். மொத்தம் 150 குடைகள் வழங்கப்பட்டது. குர்பானி அறக் கட்டளை சார்பில் சிட்டி ப.கணேஷ் நன்றி கூறினார்.