கோவை, ஜூலை 19- பள்ளி செல்லும் சாலை முழுவ தும் குண்டும், குழியுமாக உள்ளதால் சாலையை உடனடியாக சீர்படுத்தக் கோரி பெற்றோர்கள் திடீர் போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கோவை ஒண்டிபுதூர் பகுதியில் சிஆர்ஆர் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கணக் கான மாணவர்கள் கல்வி பயின்று வரு கின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படு கிறது. இதனை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரு கின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, இந்த சாலையில் நடந்து கூட செல்ல முடியாத வகையில் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பள் ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், வெள்ளியன்று மாணவர் நல பெற்றோர் கள் சங்கத்தினர், இச்சாலையை சீர்படுத் தகோரி போராட்டத்தை முன்னெடுத்த னர்.
இதுகுறித்து, மாணவர், பெற்றோர் நல சங்க ஒருங்கிணைப்பாளர் வீ. தெய்வேந்திரன் கூறுகையில், திருச்சி சாலையில் இருக்கக்கூடிய ஒண்டிப்பு தூர் சிஆர்ஆர் பள்ளி மற்றும் பட்டணம், திருவள்ளூர் நகர், சாந்தி நகர் போவ தற்கான சாலையாக இருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட தார்சாலை பழுதடைந்து இன்று வரை சீரமைக்கப்படவில்லை. குண்டும், குழி யுமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. நூற் றுக்கணக்கான குழந்தைகள், இந்த சாலையின் வழியாக பள்ளிக்கு செல் கின்றனர். தினமும் மாணவர்கள் கீழே விழுந்து காயமாவது தொடர் நிகழ்வாக உள்ளது. இந்த சாலையினை உட னடியாக சீரமைத்து மீண்டும் தார்சாலை யாக அமைத்துக் கொடுக்க சிஆர்ஆர் பள்ளியில் இருக்கக்கூடிய அனைத்து பெற்றோர்கள் சார்பாக, அரசின் கவ னத்தை ஈர்க்கும் வகையில், பதாகை களை கையில் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
விரைந்து கோவை மாநகராட்சி தார்ச் சாலை அமைக்கவில்லை என்றால் அடுத்து மறியல் போராட்டத்திற்கு தயா ராவோம், என்றார்.