சேலம், நவ.15- சேலம் அருகே கல்லூரி விடுதியில் ஆய் வுக்கு சென்ற ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை விடுதி மாணவர்கள் முற்றுகை யிட்டு, பல வருடங்களாக எந்தவொரு அடிப் படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருவ தாக குற்றஞ்சாட்டினர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் சேலம் மண்டல அளவிலான ஆதித்திரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமி ழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடை பெற்றது. இதன்பின், சேலம், மரவனேரி பகுதி யில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப் பொழுது விடுதியில் தங்கியிருந்த 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் அமைச்சரை முற்றுகையிட்டு கோரிக்கைகளை பட்டிய லிட்டனர். அப்போது மாணவர்கள் கூறுகையில், இந்த விடுதியில் சரியான உணவு வழங்கி பல நாட்கள் ஆகிறது. முறையான குடிநீர் வசதி இல்லை. குளிப்பதற்கும், கழிவ றைக்கும் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம், என்றனர். மேலும், ஒவ்வொரு நாளும் உயிர் பயத்துடனே இந்த விடுதி யில் தங்கி வருவதாகவும், இந்த விடுதியில் ஏராளமான பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப் பூச்சிகள் இருப்பதாகவும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சமையலறை மற்றும் கழிவறைக்குள் சென்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப் பொழுது எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததை அவரே அறிந்தார். இதைய டுத்து இப்பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைசார்ந்த அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் செ.கார் மேகம், ஆதிதிராவிடர் நலத்துறையின் இயக் குநர் த.ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவ லர் பெ.மேனகா ஆகியோர் உடனிருந்தனர்.