கோவை அக். 27- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மனுக் கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பின ருமான எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஈரோடு இதேபோன்று ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதிக்குட்பட்ட 10 தீர்க்கப் படாத பிரச்சனைகள் குறித்து மனுக்களை அளித்துள்ளனர். இது மாவட்ட அளவில் நிறை வேற்றக்கூடிய கோரிக்கைகள் மாவட்டத் திலேயே நிறைவேற்றப்படும். மேலும் அர சால் அனுமதி பெற்று நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் அரசின் அனுமதி பெற்று பின்னர் நிறைவேற்றப்படும் என்றனர்.