districts

img

மரக்கன்றுகள் நடும் விழா

நாமக்கல், டிச.23- பள்ளிபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிறன்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி யில், ராசிபுரம் இடைப்படுகாடுகள் வனச்சரகம் 2 மற்றும் பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் இணைந்து, தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான பசுமையாக்கல் என்ற திட்டத்தின் கீழ், பள்ளிபாளையம் முழுவதும்  சுமார் 800 மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டப்பட் டது. இதில் முதற்கட்டமாக 100 மரக்கன்றுகளை பள்ளி பாளையம் நகர்மன்றத் தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பாலமுருகன், நகராட்சி பொறியா ளர் ரேணுகா, வனச்சரக அலுவலர், ஆகியோர் ஞாயி றன்று துவக்கி வைத்தனர். கலைஞர் திடல் மற்றும் கிருஷ்ணவேணி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரி யர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.