கோவை, ஜன.18- பொங்கல் விடுமுறை முடிந்து வேலை, கல்லூரி மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களை பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்துகள் பயணச்சீட்டுகளில் விலையை அதிகரித்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர். அரசு உடனடியாக தலை யிட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன.14 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பலர் தங் களின் சொந்த ஊர்களுக்கு பண்டி கையை கொண்டாட சென்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து கோவைக்கும் வந்தனர். இந் நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து புதனன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதனால், கோவைக்கு வந்த வர்கள் தங்களின் ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். குறிப்பாக, கோவையிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிக்கு செல்ல 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்து கள் இயக்கப்பட்டது. இதில், தனி யார் பேருந்துகளில் கூடுதல் கட் டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக, கோவையிலிருந்து சென்னைக்கு ஏசி படுக்கை வசதி யுடன் கூடிய ஆம்னி பேருந்துகளில் ஒரு நபருக்கு ரூ.1,500 முதல் ரூ. 2,500 வரை பயணச்சீட்டு விற்பனை செய்யப்பட்டது. ஏசி பேருந்து களில் ரூ.1,200 முதல் ரூ.1600 வரை யும், ஏசி இல்லாத பேருந்துகளில் ரூ.1,100 முதல் ரூ.1,500 வரை பய ணச்சீட்டு விற்பனை செய்யப் பட்டது. மேலும், கோவையி லிருந்து பெங்களூருக்கு ரூ.1,100 முதல் ரூ.1,800 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், பயணி கள் அதிர்ச்சி அடைந்தனர். கூடுதல் கட்டணம் காரணமாக கோவை வந்தவர்கள் ஊர் திரும்ப முடி யாமல் அவதிப்பட்டனர். அனைத்து பேருந்துகளிலும் இருக்கைகள் நிரம்பியது. இதனால் பலர் ரயில் களில் முன்பதிவு இல்லாத பெட்டி களில் பயணம் செய்தனர். இந்நிலையில், பெரும்பாலான வர்கள் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் விடுமுறை நாளுக்கு பிறகு தனியார் ஆம்னி பேருந்து களில் கட்டணம் குறைவு என்பதால் பலர் இணையதளம் மூலம் முன் பதிவு செய்து வருகின்றனர். பொங்கல் விடுமுறைக்கு பிறகு புதனன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால், கோவையி லிருந்து ஈரோடு, சேலம், திருச்சி, தேனி, உதகை உள்ளிட்ட சொந்த ஊருக்கு சென்ற கல்லூரி மாண வர்கள், பொதுமக்கள் என பலரும் மீண்டும் பேருந்துகள் மூலம் கோவை திரும்பினர். இதனால், அரசு சிறப்பு பேருந்துகளில் கூட்டம் அதிகளவில் காணப் பட்டது. காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பேருந்து நிலையங் களில் கூட்ட நெரிசல் காணப் பட்டது.