திருப்பூர், ஜூலை 6 - திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் அணைப்பாளையம் குளத்திற்கு நொய்யல் ஆற்று நீரை நிரப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதா வது: ஊத்துக்குளி வட்டம், அணைப்பாளை யம் கிராமத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான அணைப்பாளையம் குளம் உள் ளது. இந்த குளத்திற்கு நொய்யல் ஆற்றில், நல்லாறு இணையும் கூடுதுறை அணைக்கட் டில் இருந்து வாய்க்கால் மூலமாக தண்ணீர் கொண்டு சென்று நீர் நிரப்புவதற்கு முறை யான வரத்து வாய்க்கால்கள் உள்ளது. கடந்த காலங்களில் நொய்யல் ஆற்றில் மழை வெள்ள நீர் வருகிறபோது, கூடுதுறை அணைக்கட்டில் உள்ள மதகுகள் வழி யாக தண்ணீர் திறக்கப்பட்டு அணைப்பாளை யம் குளம் நீர் நிரப்பி வைக்கப்படும். இதன் மூலம் ஊத்துக்குளி தாலுகாவில் உள்ள கிராமங்களும், சென்னிமலை ஒன்றியப் பகுதியில் உள்ள கிராமங்களும் சுமார் பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு நீர் பிடிப்பு ஏற்பட்டு கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், விவசாயப் பணிகள் நடைபெறுவதற்கும் உதவிகரமாக இருந்து வந்தது. சமீப ஆண்டுகளாக நொய்யல் ஆற்றில் மழை வெள்ளநீர் வந்தபோது ஒரு சில நபர்க ளின் குறுகிய நோக்கத்தால் கூடுதுறை அணைக்கட்டில் மதகுகளை இயக்கி குளத் திற்கு நீர் நிரப்ப தடை ஏற்படுத்தி வருகிறார் கள். இதனால் குளம் வறண்ட நிலையில் உள் ளது. ஆகவே இனிவரும் காலங்களில் நொய் யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்தால் கூடுதுறை அணைக்கட்டில் உள்ள மதகு களை இயக்கி அணைப்பாளையம் குளத் தில் நீர் நிரப்ப வேண்டும் என கோரியுள்ள னர். மருத்துவமனைக்கு தூய்மைப் பணியாளர் தேவை மேலும், ஊத்துக்குளி அய்யம்பாளையத் தில் இயங்கி வரும் ஊத்துக்குளி அரசு மருத்து வமனைக்கு தூய்மைப் பணியாளர் நியமிக்க வேண்டும். இங்கு தூய்மைப் பணியாளர் நியமிக்கப்படாததால், மருத்துவ மனை சுற்றுப் புற தூய்மைப்பாதிக்கப்பட் டுள்ளது. அத்துடன் மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் இல்லாததால் அறுவை சிகிச்சை போன்ற பணிகளும் ஒத்தி வைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை அரங்கத்தை சுத்தப்படுத்த தூய்மைப் பணியாளர் இல்லை என்ற குறைபாடு காரணமாக அறுவை சிகிச்சை செய்வது குறைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். அல்லது வேறு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதனால் நோயாளிகளுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுகிறது. மருத்துவமனை உள் நோயாளிகள் வார்டு மற்றும் கழிப்பிடம் போன்றவை போதுமான சுகாதார வசதி இல் லாமல் உள்ளது. ஆகவே ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு தேவையான எண்ணிக் கையில் தூய்மைப் பணியாளர் நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.