districts

img

ஆக்கிரமிப்புகளை அற்றாமல் முள்ளுவாடி ஏரியை புனரமைப்பதா?

தருமபுரி, ஏப்.12- முள்ளுவாடி ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு களை அகற்றாமல், கழிவுநீரை வெளியேற்றி னால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என அப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூ ராட்சி, 12 ஆவது வார்டுக்குட்பட்ட முள்ளு வாடி பகுதியில் தேசிநாயக்கன் ஏரி என்கிற முள்ளுவாடி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி தற்போது குப்பைகள், கழிவு நீர்கள் கலந் தும், சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப் பும் நிறைந்து பராமரிப்பின்றி காணப்படு கிறது. இந்நிலையில். முள்ளுவாடி ஏரி கலை ஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.ஒரு கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் புனர மைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி கடந்த மாதத் தில் நடைபெற்றது. தற்போது ஏரி கரையை உடைத்து கழிவுநீர் கலந்த தண்ணீரை வெளி யேற்றும் பணி திங்களன்று மாலை ஜேசிபி எந்திரம் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் ஏரியிலிருந்து தண்ணீர் செல்லும் கால் வாய் பாதை முற்றிலும் ஆக்கிரமிப்பில் உள் ளது. இதனால் தற்போது ஏரிக்கரையை உடைத்து கழிவுநீர் கலந்த தண்ணீரை வெளி யேற்றினால் அருகில் உள்ள விவசாய நிலங் கள் முழுவதுமாக பாதிக்கப்படும். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி கால் வாய் தோண்டப்பட்ட பின்னரே ஏரி கரையை  உடைத்து கழிவுநீர் கலந்த தண்ணீரை வெளி யேற்ற வேண்டும் என்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பென்னா கரம் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா,  போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டு, விரைவில் ஏரி கால்வாய் பகுதிகள் அளவீட்டுப் பணி செய்து முறையாக பணி தொடங்கப்படும் என உறுதி அளித்தார். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.