தருமபுரி, நவ.15- சீரான குடிநீர் வழங்க கோரி பாலக் கோடு பேரூராட்சி சேர்ந்த பொது மக்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 1,2, 3, 8,10 மற் றும் 5 ஆகிய வார்டுகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினக்கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 5 வார்டுகளில், கடந்த 1 மாதமாக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் முறை யாக வருவதில்லை. மேலும், 15 நாட் களுக்கு ஒருமுறை குறைந்த நேரமே விநியோகம் செய்யப்படுகிறது. ஒகே னக்கல் குடிநீர் வராததால் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள் ளப்பட்டுள்ளனர். இதில் பலரும் குடி நீரை விலைக்கு வாங்க முடியாத நிலையில் உள்ளவர்கள். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொது மக்கள் மற்றும் கவுன்சிலர்கள் விம லன், குருமணிநாதன் ஆகியோர் பாலக்கோடு - பெல்ரம்பட்டி சாலை யில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் சுமார் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இத்தகவலறிந்த பேரூராட்சி தலை வர் முரளி, செயல் அலுவலர் டார்த்தி, மாவட்ட துணை கண்காணிப்பாளர் சிந்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முறையான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இத னையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.