சேலம், ஆக.30- ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பயன்களை வழங்க வேண் டும் என வலியுறுத்தி, சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஊழியர் சந் திப்பு பிரச்சாரம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு மையங்களில் 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியான, சத் துணவு ஊழியர்களுக்கு முறை யான காலமுறை ஊதியம் வழங் கப்படும், என்பதை நிறைவேற்ற வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், அகவிலைப் படியுடன் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறுகின்ற நாளிலேயே, உரிய பணப்பயன்களை வழங்க வேண் டும். காலை உணவுத் திட்டத்தை அனைத்து சத்துணவு மையங்க ளுக்கும் விரிவுபடுத்தி, சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல் படுத்த வேண்டும். சமூக தணிக் கையை அரசு மாற்றியமைத்து, நடைமுறையில் இருந்த உள்ளாட்சி தணிக்கை முறையை செயல்ப டுத்த வேண்டும். ஆய்வு என்ற பெய ரில் அரசு அதிகாரிகள் சத்துணவு ஊழியர்களை அலைக்கழிப்பு செய்வதை கைவிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கத்தினர், வெள்ளியன்று அனைத்து மாவட்டங்களிலுள்ள ஒன்றியத் தலைநகரங்களில் ஊழியர் சந்திப்பு பிரச்சாரம் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அதன்ஒருபகுதியாக, சேலம் மாவட்டம், மேட்டூர் கொளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத் தலைவர் விஜயா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன் றியச் செயலாளர் ராஜூ கோரிக்கை களை விளக்கி உரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் புனிதா சிறப்புரையாற்றினார். இதில், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் சிங்கராயன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.லீலாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஒன்றியப் பொருளாளர் லட்சுமி நன்றி கூறி னார். இதேபோன்று, சேலம் மாவட் டத்தில் பல்வேறு பகுதிகளில் சத்து ணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி இதேபோன்று, தமிழ்நாடு சத் துணவு ஊழியர் சங்கத்தினர், தரும புரி வட்டார வளர்ச்சி அலுவலகத் தில் ஊழியர் சந்திப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ராமன் தலைமை வகித்தார். இதில், ஒன்றியச் செய லாளர் பராசக்தி, துணைத்தலை வர் பி.வளர்மதி, நிர்வாகிகள் ஜான் சிராணி, ஜெயந்தி, சரஸ்வதி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் முகமது இலி யாஸ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.