நாமக்கல், செப்.2- தமிழக அரசின் இலவச மடிக்க ணினி வழங்கக்கோரி, மாணவிகள் பலர் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் தாலுகா, பள்ளிபாளை யம் ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவிகள், திங்க ளன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், கடந்த 2017 - 2018 ஆம் ஆண்டு பள்ளிபா ளையம் கிருஷ்ணவேணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள், பள்ளி இறுதியாண்டு முடித்தோம். ஆனால், அந்த சமயத்தில் தமிழக அரசின் சார்பில் இலவச மடிக்கணினி எங்களுக்கு வழங்கப்படவில்லை. அடுத்து வரும் கல்வியாண்டில் கல்வி பயிலும் மாணவிகளுக்கும், எங்களுக்கும் சேர்த்து இலவச மடிக் கணினி வழங்குவதாக பள்ளியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், நாங்கள் அனைவரும் மாற்றுச்சான்றி தழை பெற்றோம். ஆனால், பள்ளியி லிருந்து வெளியேறி பல ஆண்டுகளா கியும், இதுவரை எங்களுக்கு மடிக்க ணினி வழங்கப்படவில்லை. விசைத் தறி தொழிலாளிகளின் மகள்களான எங்களுக்கு தொழில்நுட்ப அறிவு கிடைக்க தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.