districts

img

சிவன்மலை கிராமத்தில் கல்குவாரிகள் உரிமத்தை ரத்து செய்ய மக்கள் கோரிக்கை

திருப்பூர், நவ.14- திருப்பூர் மாவட்டம்,  காங்கேயம் வட்டம், சிவன் மலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளால் சுற்றுச் சூழல் சீர்கேடு ஏற்படும் நிலையில் அவற்றின் உரி மத்தை ரத்து செய்யும்படி அப்பகுதி மக்கள் கோரி யுள்ளனர். திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவன் மலை ஊராட்சி, சிக்கரசம்பாளையம் ஜீவா  காலனியைச் சேர்ந்த பொது மக்கள் ஏராளமா னோர் கையெழுத்திட்ட மனு மாவட்ட ஆட்சிய ரிடம் அளிக்கப்பட்டது. இதில் சிக்கரசம்பாளையம் ஜீவா காலனி,  ராமபட்டிணம் ஆகிய கிராமங்களுக்கு அருகே கல்குவாரி செயல்படுவதால் புகை,  ஒளி மாசு ஏற்படுவதுடன், நில அதிர்வும் ஏற்படு கிறது. குறிப்பாக அப்பகுதி கல்குவாரியில் சட்டத்துக்குப் புறம்பாக வெடிகளை பயன் படுத்துவதால் அதிக ரசாயன மாசு ஏற்படு கிறது. காற்று மாசடைந்த நிலையில் இதை  சுவாசிக்கும் மக்களுக்கு நெஞ்சு எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. புகை மாசை கட்டுப்படுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. முறையாக பசுமை வளை யமும் அமைக்கவில்லை. கம்பிவேலி, பெயர் பலகை தற்போது வரை அமைக்கப்பட வில்லை. வெடிச்சத்தம் காரணமாக அதிர்ச்சி அடைந்து குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டு அழுகின்றனர். விவசாய பயிர்  பாழடைகிறது. கால்நடைகள் பருகும் தண்ணீர் வீணாகிறது. வீடு மற்றும் கிணறு களின் சுவர்கள் சேதமடைகின்றன. அதிகாரிகளிடம் அவ்வப்போது புகார்  கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. அவர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு முறை கேட்டுக்கு உடந்தையாக செயல்பட்டு உண்மையை மூடி மறைத்து வருகின்றனர். எனவே கல்குவாரிகள் இயக்கத்தை நிறுத்தி  அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே சிவன் மலை ஊராட்சிமன்றத் தலைவர் கே.கே.துரைசாமி தலைமையில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற்ற ஊராட்சிமன்றக்  கூட்டத்திலும் ராமப்பட்டினம் கல்குவாரி யால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்கவும் வலியு றுத்தப்பட்டுள்ளது.