districts

img

ஆடி 18இல் 100 பெண்கள் கும்மியாட்டம் பண்பாட்டை மீட்டெடுத்த மக்கள் திருவிழா

திருப்பூர், ஆக. 5 - திருப்பூர் அருகே முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிட்கோ பகுதி யில், ஆடி 18 அன்று 100 பெண்கள் பங் கேற்ற கும்மியாட்டம், கருப்பசாமி ஆட் டம் என ஆயிரம் பேர் பார்த்து பரவசம டைந்த பண்பாட்டுத் திருவிழா நடை பெற்றது.  முதலிபாளையம் சிட்கோ மெயின் கேட் அருகே நடைபெற்ற இந்த விழா வுக்கு காவேரி பிரின்டிங் எஸ்.பி.செந் தில்குமார் தலைமை ஏற்றார். பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் என். சம்பத்குமார் முன்னிலையில் எம்.மகேஷ் வரவேற்றார். அழகு வள்ளி கலைக்குழுவின் ஆசி ரியர்கள் ராசு, செல்வராசு, பாபு ஆகி யோரின் பயிற்சியில் 100 பெண்கள் பங்கேற்ற வள்ளி கும்மி ஆட்டம் இங்கே  அரங்கேறியது. இந்த ஆசிரியர்களின் 23  ஆவது அரங்கேற்றமாக இது அமைந் தது. தென்மேற்கு பருவ காலத்தில் ஆற் றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த  மழையினால், ஆறுகளில் புதுப்புனல்  பொங்கிவரும். இதையே ஆற்றுப்  பெருக்கு எனக் கூறுவர். இதனால் உழ வர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். ஆடி  மாதத்தின் 18ஆவது நாளில் தமிழகத் தில் உள்ள ஆறுகளில் நீர் பெருக்கெ டுத்து ஓடும். இந்த நாளில் நதிகளை தங் கள் வீட்டு பெண்ணாக பாவித்து, வர வேற்று, வழிபடுவது தமிழர்களின் வழக் கம். இதையே ஆடிப் பெருக்கு, ஆடி 18,  ஆடி பதினெட்டாம் பெருக்கு என பலவி தமான பெயர்களில் மக்கள் கொண்டாடி னர். தண்ணீரைப் போற்றும் தமிழர்க ளின் திருவிழாவாக தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, காவிரி பாயும் பகுதிகளில் இவ்விழா கோலாகலமாகவும் குதூக லத்துடனும் நடைபெறுவது வழக்கம். ஆடிப்பெருக்கு என்பது நீர் இன்றி அமையாது உலகு என்பதை உணர்ந்த  நம் முன்னோர்கள், அதைப் போற்றுவ தற்காகவும், நன்றிக் கடன் செலுத்துவ தற்காகவுமே காலம் காலமாக இவ் விழாவைக் கொண்டாடி வந்திருக்கி றார்கள் என்று பண்பாட்டு ஆய்வாளர் கள் குறிப்பிடுகின்றனர்.  குறிப்பாக இவ் விழா, நீரோடும், நிலத்தோடும் காலத் தோடும் தொடர்புடைய விழா. இவ்விழா வில் ஊரே களை கட்டியிருக்கும். இந்த விழாவை சனிக்கிழமை யன்று சிறப்பாக கொண்டாடினர். முதலி பாளையம் சிட்கோ மெயின் கேட் முன்பு  100 பெண்கள் பங்கேற்கும் கும்மியாட் டத் திருவிழா மற்றும் கருப்புசாமி ஆட் டம் நடைபெற்றது. இவ்விழாவில் பின்னல் புக் ட்ரஸ்ட்  முத்துக்கண்ணன், பனியன் சங்க தலை வர் சி.மூர்த்தி, வேலம்பாளையம் கலைக்குழு கே.ரங்கராஜ், தூத்துக்குடி  பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர். குமார், திருமூர்த்தி கபடி குழு எஸ். தங்கராஜ், அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஏ.சிகாமணி, தமுஎகச முன் னோடி விழிப்பு நடராஜன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற னர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வர் பி.விஸ்வலிங்க சாமி, அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ஏ.ரகுபதி, எம்.எஸ். சாமிநாதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந் தினராக பங்கேற்று வாழ்த்தினர்.  சிட்கோ வெள்ளக்கரடு, ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த  100 பெண்கள் பங்கேற்று நளினமாக வள்ளி கும்மி ஆட்டத்தை அரங்கேற்றி யதை கண்டு அங்கு திரண்டி இருந்த  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாக  கரவொலி எழுப்பினர். அத்துடன் கருப்பு சாமி ஆட்டம் தங்கள் முன்னோரின் மர புக் கலையையும், உணர்வு எழுச்சியை யும் பார்வையாளர்களை வசப்படுத்தி யது.  சிட்கோ கலைக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இந்த மக்கள் திருவிழா, தமிழர்களின் வளமான பண்பாட்டை மீட்டெடுத்தது. நிறைவாக நிகழ்ச்சி ஏற் பாட்டாளர்கள் சார்பாக எம்.மகேஸ்வ ரன் நன்றி தெரிவித்தார்.