கோவை, ஏப்.4- வார்டுகளில் உள்ள மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாமன்ற உறுப்பினர்கள் கோவை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் மனு அளித்தனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலகங்களிள் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரிடையாக சென்று மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதன்ஒருபகுதியாக, கோவை வடக்கு மண்டலத்திற்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற் றனர். இதில், கோவை வடக்கு மண்ட லத்திற்குட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பி னர்கள் வி.இராமமூர்த்தி, ஆர்.பூபதி, சுமதி மற்றும் கண்ணகி ஜோதிபாசு ஆகியோர் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் தங்களது வார்டுக்குட்பட்ட மக்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இதில், 12 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.ராம மூர்த்தி அளித்த மனுவில், அத்திக் கடவு மூன்றாவது குடிநீர் திட்டத்தின் மூலம் நஞ்சை கவுண்டன் புதூர் மேல்நிலைத் தொட்டியில் இருந்து உடையாம்பாளையத்திற்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் அருகில் இருந்து நீர் ஏற்ற இணைப்பு கொடுக்க முடியும். ஆனால், தற் போது 16 கிலோமீட்டர் சுற்றி நீரினை ஏற்ற திட்டமிட்டுள்ளனர். இதனை மாற்றி நஞ்சை கவுண்டன் புதூர் பள்ளியிலிருந்து மேற்கண்ட தொட் டிகளுக்கு நீரை ஏற்றுவதற்கு மதிப்பீடு தயாரித்து செய்து கொடுக்க வேண்டும் என வலியு றுத்தினார். மேலும், காந்திநகர் பிர தான வடிகால் மற்றும் அம்மன் நகர் வேலன் நகர் பார்க் டவுன் மற்றும் முருகன் நகர் செல்லம்மாள் நகர் முதல் பாலாஜி நகர் வழியாக அம்மன் கோவில் பிரதான வடி கால் அமைக்க வேண்டியும், குரு வாயூரப்பன் நகர் கொடிக்கால் மணி காரம்பாளையம், சிஎம்எஸ் காலனி யில் உள்ள பூங்கா இடத்தில் புதிய பூங்கா அமைக்க வேண்டும் என வும், உடையம்பாளையம் கந்த சாமி நகர் முதல் தாகூர் ரோடு வரை வாய்க்கால் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனு வாக கொடுத்தார்.
இதேபோன்று, 28 ஆவது மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு அளித்த மனுவில், சோபா நகர் பகுதியில் உள்ள மாநக ராட்சி நடுநிலை பள்ளியை உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும். சக்தி சாலை, இ.பி காலனி, இளங்கோ நகர் வழியாக அவினாசி சாலை இணைக்கும் திட்ட சாலை பணியை அமைத்திட வேண்டும். அரசமர வீதியில் உள்ள பழைய நீர் தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி மக்கள் பயன் பாட்டிற்காக மாமன்ற உறுப்பினர் அலுவலகம், மாநகராட்சி செயற் பொறியாளர் அலுவலகம் உள் ளிட்ட ஒருங்கிணைந்த வளாகம் அமைத்து தர வேண்டும். பட்டா ளம்மன் கோவில் வீதி பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் பழுத டைந்த பகுதிகளை சீர் செய்து, மேற்கூரை அமைத்து, சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இதேபோன்று, கிழக்கு மண்ட லத்திற்கு உட்பட்ட 24 ஆவது வார்டு தண்ணீர் பந்தல் ஸ்கீம் ரோடு கீதாஞ் சலி நகர் முதல் என் ஆர் கார்டன் வரை 7, 8 திட்ட சாலை அமைக்க வேண்டும், கௌதம்புரி நகர் பேஸ் ஒன் ஆகிய பகுதிகளில் புதிய சாலை அமைக்க வேண்டும் எனவும், திருப்பதி வெங்கடா ஜலபதி நகர் இண்டஸ்ட்ரியல் லைன் மற்றும் லட்சுமி கார்டன் சாலைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற மாமன்ற உறுப்பினர் பூபதி அளித்த மனுவில் தெரிவித் திருந்தார்.