districts

img

கடும் வறட்சியால் பாதிப்பு: குளம், குட்டைகளில் பிஏபி தண்ணீர் நிரப்ப ஊராட்சி மக்கள் கோரிக்கை

திருப்பூர், செப்.27- தாராபுரம் தாலுகா பொட்டிக்காம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குளம், குட்டைகளில் இரண்டாம் மண் டல பாசன நீர் நிரப்ப வேண்டும் என  பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்துள்ளனர்.  பொட்டிக்காம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் தேவி தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வெள்ளியன்று அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, தாராபுரம்  தாலுகாவை சேர்ந்த பொட்டிக்காம்பா ளையம் ஊராட்சியில் 10 கிராமங்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிக ளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஆழ்குழாய் கிணற்று நீர் 1500 அடிக்கும் கீழே சென்று விட்டது. தற் போது, மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று நான்கு நாட்களுக்கு ஒரு முறை  லாரி மற்றும் டிராக்டர் மூலம் குடிநீர்  விநியோகிக்கப்பட்டு வருகிறது. 6 மாத  காலமாக குடிநீர் பற்றாக்குறை நிலவுகி றது. எனவே பொட்டிக்காம்பாளையம் ஊராட்சியில் பிஏபி இரண்டாம் மண்டல  பாசன நீர் வந்து கொண்டிருக்கிறது. குக்கிராமங்களில் பொதுமக்களின் நலன் கருதி ஊருக்கு அருகில் உள்ள குளம், குட்டைகளில் இரண்டாம் மண் டல பாசனநீரை வழங்க வேண்டும்  என கூறப்பட்டுள்ளது.