உடுமலை, அக்.14- அரசு போக்குவரத்துக் கழகம், விழா காலத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்க, தனியார் நிறுவனங்களிடம் பேருந்துளை வாடகைக்கு எடுக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங் கத்தினர் உடுமலை பேருந்து பணிமனை முன்பு திங்கட்கிழமை கண்டன ஆர்ப் பாட்டம் செய்தனர். சிஐடியு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கத்தின் கிளைச்செயலாளர் கார்த் திகேயன் தலைமையில் திங்களன்று உடுமலையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், விழாக் காலத்தில் பொது மக்களின் நலன் கருதி அரசு போக்குவ ரத்து பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் என்ற பெயரில் இயக்கப்படும். ஆனால் தமிழகத்தில் கடந்த முறை விழா காலத் தில் சிறப்பு பேருந்துகள் இயக்க தனி யார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கப்பட்டது. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது என்பது சேவைத்துறையான போக்கு வரத்துக் கழகத்தை தனியார்மயப்ப டுத்தும் செயலாகும். எனவே தமிழக அரசு இதைத் தடுக்க வேண்டும். தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டிய சம் பள உயர்வு குறித்து கடந்த ஐந்தாண்டுக ளாக தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் காலம் தாழ்த்தப் பட்டு வருகிறது. இது அனைத்து தொழி லாளர்களுக்கு அரசு செய்யும் துரோ கம். தொழிலாளர்கள் நலனை புறக்க ணிக்காமல் உடனடியாக பேச்சுவார்த் தையைத் துவக்க வேண்டும். போக்குவ ரத்துக் கழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் டி.ஏ மற்றும் கிராஜு விட்டி தொகையை உடனே வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் சிஐடியு மண் டல துணை பொதுச் செயலாளர் விஸ் வநாதன் சிறப்புரை ஆற்றினார். திர ளான தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர்.