சேலம், மார்ச் 25- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து ஓமலூர் பேருந்து நிலையம் முன்பு சிபிஎம் ஓம லூர் தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. அண்மையில் ஒன்றிய மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ் வாதாரம் குறித்த எந்த கவலையும் கொள்ளாமல், கார்ப்ரேட்டு களின் களவானித்தனத்திற்கு துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மக்களை புறக்கணித்த ஒன்றிய மோடி அர சின் பட்ஜெட்டை கண்டித்தும், பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், திரிபுரா மாநிலத்தில் குண்டர்களால் அரங்கேற்றப்படும் கொலை வெறி தாக்குதல் களை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு ஓமலூர் தாலுகா செயலா ளர் என். ஈஸ்வரன் தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செய லாளர் மேவை. சண்முகராஜா கண்டன உரை ஆற்றினார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.