திருப்பூர், ஜூன் 14- தொகுப்பூதிய செவிலியர்களுக்கு வரு டாந்திர ஊதிய உயர்வை வழங்க வலியு றுத்தி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் புதனன்று பூலுவ பட்டியில் துணை சுகாதார இயக்குநர் அலுவ லகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம் பாட்டு சங்க மாவட்ட தலைவர் மீனா தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு வழங்க வேண்டிய 5 சதவிகிதம் வருடாந்திர ஊதிய உயர்வினை வழங்க வேண்டும். கருவூலம் மூலம் ஊதியம் பெறும் அனைத்து தொகுப்பு புதிய செவிலியர்களுக்கும் உயர்த்தப்பட்ட ஊதியம் ரூ.18 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாதத்தின் முதல் நாளில் மாத ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட் டது. இதில், சங்க மாவட்ட செயலாளர் விஜய ராணி, மாநில இணைச்செயலாளர் எ.பெஜாக் சின், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ராணி, மாவட்ட இணைச் செயலாளர் ஆர். ராமன், மாவட்ட துணை தலைவர் அந்தோணி ஜெயராஜ், தெற்கு வட்ட கிளை பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட திரளான செவிலி யர்கள் பங்கேற்றனர்.