கோவை, ஜூன் 15- கடந்த பத்தாண்டில் மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்தது பாஜக. இனி அதற்கு இடமில்லை புதிய ஆரம் பம் புதிய நம்பிக்கை கொடுத்துள்ளது என துரை வைகோ செய்தியாளர்களி டம் தெரிவித்தார். கோவையில் திமுக சார்பில் நடை பெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்க திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் புதிதாக வெற்றி பெற்றுள்ள 40 நாடாளுமன்ற உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர்.
இவ்வி ழாவில், பங்கேற்க தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வந் தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வர வேற்பு அளித்தனர். மேலும், விழாவில் பங்கேற்க எம்.பிக்கள் பலர் விமானம் மூலம் கோவை வந்தனர். அதன்படி, முப்பெரும் விழாவில் பங்கேற்க மதி முக தலைமை கழக செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ விமான நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்தியா கூட்டணிக்கு வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரி விக்கும் விழா. திமுக அரசின் 3 ஆண்டு கால சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று தான் பார்க்க வேண்டும், தமிழ கம் திராவிட மண் மதவாத அரசியலுக்கு இடம் இல்லை என்று மக்கள் வாக்குகள் செலுத்தி விடை அளித்துள்ளனர்.
திமுக கூட்டணியில் மதிமுக தொடரும், விக்கிர வாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு மதிமுக பாடுபடும். மக்கள வைத் தேர்தல் வெற்றி என்பது மாற்றத் திற்கான ஒரு ஆரம்பம் பாஜகவிற்கு என தனி பெரும்பான்மை கிடையாது. கடந்த பத்தாண்டில் பாஜக மக்கள் விரோத அரசு எதிரான சட்டங்கள் கொண்டு வந் துள்ளனர். இனி அதற்கு இடமில்லை புதிய ஆரம்பம் புதிய நம்பிக்கை கொடுத்துள்ளது. மத்திய அரசின் சர்வ திகார போக்கு முடிவுக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற செயல்பாடுகளில் முடிந்த அளவுக்கு பாஸ் மார்க் வாங்க வேண்டும். தமிழக மக்களின் நலனுக் காக நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படுவேன். தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக வாஷ் அவுட் பாஜகவினர் 11 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளனர் என்றார்.