districts

img

கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை வழங்கிடுக கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு

தருமபுரி, டிச.6- கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை  வழங்கக்கோரி தருமபுரி மாவட்ட ஆட் சியரிடம் மனு அளிக்கப்பட்டது.  இதுகுறித்து கொசு ஒழிப்பு பணியா ளர்கள் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர் சினியிடம் அளித்த மனுவில் கூறப்பட் டுள்ளதாவது. கொரோனா காலங்க ளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப ஆய்வக பணியாளர்கள் ஆகியோருடன்‌ கொசு ஒழிப்பு பணி யாளர்களும் சேர்ந்து கொரோனா மாதிரிகளை சேகரிப்பது காய்ச்சல் உள்ளதா என கண்டறிவது, பாதிக்கப் பட்ட இடங்களில் கிரிமிநாசினி தெளிப் பது, ஆக்ஸிஜன் அளவு, இதய துடிப்பு  கண்காணிப்பது போன்ற‌ பரிசோதனை கள் செய்வது, கொரோனா நோயாளி களை மருத்துவமனையில் அனுமதிப் பது, இறக்கநேரிட்டால் அடக்கம் செய் வது போன்ற பணிகளிலும் ஈடுபட் டோம். மேலும் மாவட்ட எல்லையில் வரும் ‌ வாகனங்களுக்கு கிரிமிநாசினி தெளிப் பது,நோயாளிகளை 108 வாகனத்தில் அழைத்து சென்று மருத்துவமனை யில் அனுமதிப்பது போன்ற பணிக ளில் நாங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றினோம். எனவே எங்க ளுக்கு கொரோனா காலத்தில் பணி யாற்றியதற்கான சிறப்பு ஊக்கத் தொகை  வழங்கவேண்டும் என அந்த  மனுவில் கூறியுள்ளார்.

;