சேலம், மார்ச் 13- இடங்கணசாலை நகராட்சிக் குட்பட்ட ஏரியில் கழிவுநீர் சுத்திக ரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரி வித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட பெண்களை காவல் துறையினர் வலுக்கட்டாய மாக கைது செய்தனர். சேலம் மாவட்டம், இடங்கண சாலை நகராட்சி, 9 ஆவது வார்டுக் குட்பட்ட சின்னஏரியில் ரூ.8 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில், கழிவுநீர் சுத் திகரிப்பு ஆலை அமைக்க கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு அடிக் கல் நாடப்பட்டது. இதற்கு ஆரம்ப காலக்கட்டத்திலிருந்தே பொதுமக் கள், விவசாயிகள், ஏரி பாதுகாப்பு குழுவினர், சமூக ஆர்வலர்கள், அர சியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நக ராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட் சியர், முதல்வர் தனிப்பிரிவு உள் ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளித்தும், பல போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது. இந்நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக் கப்பட்டு. நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த பணிகளை அரசு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு துவக்கி உள்ளனர். இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டியும், எதிர்ப்பு தெரி வித்து சுவரொட்டிகளை ஒட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலையில், இப்பிரச்சனை யில் அதிகாரிகள் உரிய தலையீடு செய்யாததைக் கண்டித்து, புத னன்று 500க்கும் மேற்பட்ட பெண் கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களுக்கு பயனில் லாத வகையில், இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது எனவும், நிலத்தடி நீரை மாசுப்படுத்துவ தற்கு துணியும் அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி னர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறை யினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.