ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
தருமபுரி, ஆக.26- நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண் ணீரின் அளவு அதிகரித்ததால் காவிரி ஆற்றில் தமிழக எல்லை யான பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து 10 ஆயிரம் கனஅடியா கவே இருந்தது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்தது. இதனால் ஒகேனக் கல்லில் வெள்ளியன்று 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து சனியன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக சரிந்தது. கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து 10ஆவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இந்நிலையில் சனியன்று காலை நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக சரிந்ததால், ஒகேனக்கல்லில் சனியன்று பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் 10 நாட்களுக்கு பிறகு பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது
மேட்டூர், ஆக.26- மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரு கிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப் பட்டு வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகு வாக குறைந்தது. இதனால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண் டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை தற் போது முழுமையாக வெளியே தெரிகிறது.
தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டும் பணி துவக்கம்
நாமக்கல், ஆக.26- பள்ளிபாளையம் அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்த வர்களுக்கு புதிய வீடு கட்டும் பணி துவங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்துள்ள சின்னாக்கவுண்டம்பாளையம் கிராமத்தில், கடந்த ஆக.11 ஆம் தேதியன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்களின் வீடுகள் தீக்கிரையாகின. இவ்விபத்தில் வீடுகளை இழந்த மக்களை நேரில் சந்தித்த வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், வீடுகளை இழந்த மக்க ளின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித்தரும்படி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து ஆட்சி யர் ச.உமா, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தேவையான உதவிகளை வழங்கினார். வட்டாட்சி யர் மேற்பார்வையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டது. விபத் தில் பாதிக்கப்பட்ட மைனாவதி, தேன்மொழி ஆகியோரது கான்கிரீட் வீடுகளை தலா ரூ.25 ஆயிரம் செலவில் புதுப் பிக்கவும், முற்றிலும் வீடுகளை இழந்த சாந்தாமணி, ஈஸ்வரி, குமாரி, லட்சுமணன் ஆகியோருக்கு தலா ரூ.1.25 லட்சம் செல வில் புதிதாக கட்டிக் கொடுக்கவும் ஆட்சியர் ச.உமா உத்தர விட்டார். இதற்கான நிதியினை மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர்.என்.ராஜேஷ்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ.3 லட்சமும், ஆட்சியர் ச.உமா தன்விருப்ப நிதியிலி ருந்து ரூ.1.50 லட்சம் ஒதுக்கினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு புதிய வீடுகளை கட்டும் பணியினை ஆலாம் பாளையம் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. புதிய வீடுகள் கட்டுமான பணிகளை பேரூராட்சி தலைவர் சகுந் தலா, செயல் அலுவலர் கிருஷ்ணவேணி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
மலை காய்கறிகளை நோய் தாக்கும் அபாயம்
உதகை, ஆக.26- உதகையில் தற்போது பனி பெய்து வருவதால், மலை காய்கறிகளை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. வெப்பமும் அதிகரித்து வந்தது. இந்நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காந்தல், தலைகுந்தா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனி பெய்ய தொடங்கியுள்ளது. அங்கு தற் போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுவாக நீல கிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால், உதகையில் தற்போது பனி பெய்து வருகிறது. இதனால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக விவசாயி கள் தெரிவித்துள்ளனர். மேலும், நீலகிரியில் பனி பெய்து வரு வதால், குளிரும் சற்று அதிகரித்து உள்ளது. இதனால் அதி காலை நேரங்களில் தேயிலை மற்றும் மலை காய்கறி தோட் டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். நீலகிரியில் நடப்பாண்டு எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது லேசான மழை பெய்தாலும் கனமழை பெய்யவில்லை. இதனால், பயிர்களுக்கு விவசாயி கள் ஸ்ரிங்கலர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். மேலும், நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
குப்பைக்கிடங்கில் திடீரென தீ
கோவை, ஆக.26- போத்தனூர் - செட்டிபாளையம் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக எழுந்த கடும் புகை மூட்டத்தால், சாலையில் பயணித்தவர்கள் சிரமத்திற்குள்ளா கினர். கோவை மாவட்டம், போத்தனூர் - செட்டிபாளையம் சாலை யில் உள்ள குப்பை கிடங்கில் வெள்ளியன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குப்பையில் பிடித்த தீ மளமளவென எரிந்ததால் கடும் புகைமூட்டம் நிலவியது. இதனால் சாலை யில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதைய டுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை யினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது குப்பை கிடங்கின் அருகிலிந்த இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான குப்பைகளை தரம் பிரிக்கும் குடோன் ஒன்றி லும் தீப்பிடித்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தீய ணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
ஜி-20 மாநாடு : 160 விமானங்கள் ரத்து
புதுதில்லி, ஆக.26- தில்லியில் செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டை முன்னிட்டு 3 நாட்கள் மட்டும் 160 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தில்லி விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. அதா வது தில்லி விமான நிலையத்துக்கு வந்து செல்லும் 80 (வருகை), 80 (புறப்பாடு) விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. உள்நாட்டு விமானங்களுக்கு விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடு சர்வதேச விமான சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரி மோதி கல்லூரி மாணவன் பலி
கோவை, ஆக.26- சூலூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கல்லப்பாளை யத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் திவாகர் (19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். முதலா மாண்டு படித்து வந்தார். இந்நிலையில், திவாகர் இருசக்கர வாகனத்தில் இடையர்பாளையம் – கல்லப்பாளையம் சாலை யில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வித மாக அவ்வழியாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திவாகர் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவ்வழியாக சென்ற வர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இவ்விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுந்தர் ராஜ் (59) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
வாக்குச்சாவடிகளில் சீரமைப்பு பணி: ஆக.29க்குள் கருத்து தெரிவிக்கலாம்
உதகை, ஆக.26- நீலகிரியில் வாக்குச்சாவடிகளை மறு சீரமைப்பு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ள நிலையில், ஆக.19 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள் ளது. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து தயா ரிக்கப்பட்டுள்ளது. அதில், திருத்தி அமைக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடிகளில் பட்டியல்கள் மற்றும் திருத்தங்கள் மேற் கொள்வதற்கான பிரேரணைகள் மாவட்ட தேர்தல் அலுவல ரும், ஆட்சிருமான சா.ப.அம்ரித் தலைமையில் புதனன்று துறை அலுவலர்கள் முன்னிலையில், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆட்சேபனை, கருத்துக்கள் தெரி விக்க விரும்பினால், ஆக.29 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும், என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
கோவை, ஆக.26- அன்னூர் காவல் நிலைய பகுதியில் 12 கிலோ கஞ் சாவை விற்பனை செய்த திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார் (45) என்பவரை அன் னூர் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், பொது ஒழுங்கிற்கு பாதகமான செய லில் ஈடுபட்ட குற்றத்திற்காக செந்தில்குமார் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாரா யணன், பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஆட்சியர் கிராந் திகுமார் பாடி, செந்தில்கு மார் மீது குண்டர் தடுப்பு சட் டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இதை யடுத்து அவரை குண்டர் சட் டத்தின் கீழ் சிறையில் அடைத் தனர்.