districts

கோவை முக்கிய செய்திகள்

வணிகர் சங்கத்தினர் இன்று கடையடைப்பு: பல்வேறு அமைப்புகள் ஆதரவு

வணிகர் சங்கத்தினர் இன்று கடையடைப்பு: பல்வேறு அமைப்புகள் ஆதரவு அவிநாசி, டிச.17 – அவிநாசியில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து டிசம்பர்  18 புதன்கிழமை நடைபெற இருக்கும் கடையடைப்புக்கு பல் வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சொத்து வரி உயர்வு, வணிக அடிப்படையிலான வாட கைக் கட்டிடங்களுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பு  என்பது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வலுவான  எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருப்பூர்  அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவை மற்றும் பல தொழில்  அமைப்புகள் டிசம்பர் 18 அன்று கடையடைப்பு நடத்துவ தாக அறிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கட்சியும் இப்போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அவிநாசியில் ஹோட்டல் உரிமையாளர் சங்கம், நகை உரிமையாளர் சங்கம், பைக் டெக்னீசியன் அசோ சியேஷன், அவிநாசி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் நலச் சங்கம், ஜவுளி உரிமையாளர் சங்கம், போட்டோ வீடியோ  அசோசியேஷன், மளிகை, ரைஸ் மில் உரிமையாளர் சங்கம்,  வாகனப் பணிமனை நண்பர்கள் சங்கம், சவரத் தொழிலா ளர்கள் சங்கம், ஹார்டுவேர் -எலக்ட்ரீசியன் அசோசியேசன் உள்ளிட்ட அமைப்புகளும் கடையடைப்புக்கு ஆதரவு தெரி வித்துள்ளனர்.

கலைஞர் நூற்றாண்டு விழா  தமிழ் மன்றப் போட்டிகள் 

அவிநாசி, டிச.17 – அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் நூற் றாண்டு விழா தமிழ் மன்றப் போட்டிகள் செவ்வாயன்று நடை பெற்றது.  தமிழ் வளர்ச்சித் துறை, அவிநாசி அரசு கலைக் கல்லூரி  இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழா தமிழ் மன்றப் போட்டி கள் அவிநாசி அரசு கல்லூரியில் நடைபெற்றது.

இதில் ஏழு  துறைகளை சார்ந்த மொத்தம் 200 மாணவர்கள் கலந்து கொண் டனர். இப்போட்டிகளை கல்லூரி முதல்வர் நளதம் தொடங்கி  வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் பேராசிரியர் மணி வண்ணன், முன்னிலையிலும் பேராசிரியர்கள் நந்தினி, ஜோதி  பாண்டியன் உள்ளிட்டோர்கள் ஒருங்கிணைத்தனர்.

ஹேமலதா, தாரணி, அருண் ஆகியோர் போட்டியின் நடு வர்களாக செயல்பட்டனர். பேச்சுப் போட்டியில் தமிழுக்கு  தொண்டு செய்தோர் சாவதில்லை, கட்டுரைப் போட்டியில்  காலந்தோறும் தமிழ், கவிதைப் போட்டியில் புதிய ஆத்திச்சூடி  என்ற தலைப்பிலும், போட்டிகள் நடைபெற்றன.

இதில் முதல்  பரிசு ரூ. 5000, இரண்டாம் பரிசு ரூ. 3000, மூன்றாம் பரிசு ரூ. 2000  என அறிவித்தனர். இதில் டிசம்பர் 30ஆம் தேதி சிறப்பு  அழைப்பாளர்களை அழைத்து போட்டிகளில் வெற்றி  பெற்றவர்களுக்கு ரொக்கமும், பாராட்டுச் சான்றுகளும்  வழங்க உள்ளனர். மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதும் 30ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்

.அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம்

திருப்பூர் மாவட்டம், கடந்த சில நாட்களாக திருப் பூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால், நீர் நிலை களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அமரா வதி ஆற்றங்கரை பகுதிக ளில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே  ஆற்றங்கரை ஓரத்தில் வாழும் மக்கள் அச்சமடைந் துள்ளனர். அரசு உடனடி யாக முதலைகளை அப்பு றப்படுத்த வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

உடுமலை, டிச.17- உடுமலை அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரி யில் 20 ஆம் தேதி வெள்ளிக்கி ழமை) மதியம் 2  மணிக்கு உடுமலை வருவாய் கோட் டாட்சியர் குமார் தலைமை யில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள் ளது. இந்த கூட்டத்தில் உடு மலை மற்றும் மடத்துக்கு ளம் தாலுகா  விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறு மாறு வருவாய் கோட்டாட்சி யர் தெரிவித்து உள்ளார்.