அவிநாசி, மே 28- அவிநாசி அரசு மருத்துவமனையில், ரூ.5.15 கோடி மதிப் பீட்டில் மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கான கட்டுமானப் பணி களை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சனியன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் ரூ.5 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தரை மற்றும் முதல் தளம் என கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இங்கு மேல் தளத்தில் இரு அறுவை சிகிச்சை அறை, மருத்துவர் ஆலோசனை அறை, தரை தளத்தில் ஒவ்வொரு அறைக்கும் 4 படுக்கையில் என மொத்தம் 16 அறைகளில் 64 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இக்கட்டப் பணியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆய்வு மேற் கொண்டார். அப்போது, சோலை நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்கள், அப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என நேரில் வலியுறுத்தினர். இதை யடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது குறித்து பேசினார். இதையடுத்து தற்காலிக நடவடிக்கையாக நாள் தோறும் வெளியாகும் கழிவுநீரை லாரியின் மூலம் வெளி யேற்றப்படும் உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, பொறுப்பாளர்கள் சரவணன்நம்பி, பழனிச் சாமி, திராவிடன் வசந்த், சிவப்பிரகாஷ், பால்ராஜ், பொது பணித்துறையினர் ஆகியோர் உடனிருந்தனர்.