திருப்பூர், ஜூலை 7- உடுமலைப்பேட்டையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வெள்ளி யன்று அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் 6 இணையர்களுக்கு திரு மணம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வெள்ளி யன்று 6 இணையர்களுக்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை யேற்று நடத்தினார். முன்ன தாக, ரூ.30 ஆயிரம் மதிப் பில் சீர் வரிசையும், 4 கிராம் தங்கம் உள்ளிட்டவை களை வழங்கி, மணமக் களை வாழ்த்தி சீர்வரிசை பொருட் களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர் செந்தில்குமார், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பர மணியம், உடுமலைப்பேட்டை நகர்மன்ற தலைவர் மத்தின், உடுமலைப்பேட்டை ஒன்றி யக்குழுத்தலைவர் மகாலட்சுமி முருகன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.